செய்திகள் :

Doctor Vikatan: யாரையும் தாக்கும் புற்றுநோய்... முன்கூட்டியே தெரிந்துகொள்ள டெஸ்ட் இருக்கிறதா?

post image

Doctor Vikatan: இன்று யாருக்கு புற்றுநோய் வரும் என்றே கணிக்க முடிவதில்லை. ஒருவருக்குப் புற்றுநோய் வருமா என்பதைத் தெரிந்துகொள்ள ஏதேனும் டெஸ்ட் இருக்கிறதா?  அதை எத்தனை நாள்களுக்கொரு முறை செய்யலாம்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

இன்று யாருக்கு புற்றுநோய் வரும் என்று துல்லியமாகக் கணிக்க முடியாவிட்டாலும்,  குறிப்பிட்ட சில  பரிசோதனைகள் மூலம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும். சில வகையான புற்றுநோய்களை வழக்கமான பரிசோதனைகள் (Screening) மூலம் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிடலாம். அவற்றை வருடத்திற்கு ஒருமுறை செய்துகொள்வது நல்லது.

வாய் புற்றுநோய் (Oral Cancer): வருடத்திற்கு ஒருமுறை வாய்வழிப் பரிசோதனை (Oral Examination) செய்துகொள்வதன் மூலம் இதைக் கண்டறியலாம்.

தொண்டைப் புற்றுநோய் (Throat Cancer): வருடத்திற்கு ஒருமுறை இ.என்.டி (காது, மூக்கு, தொண்டை) மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

மார்பகப் புற்றுநோய் (Breast Cancer): பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை மேமோகிராம் (mammogram) பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (Uterus / Cervical Cancer):
பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை பாப் ஸ்மியர் (Pap Smear) பரிசோதனை செய்துகொள்வது கர்ப்பப்பை  வாயில் ஏற்படும் புற்றுநோய் மாற்றங்களைக் கண்டறிய உதவும்.

நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer): புகைப்பழக்கம் உள்ளவர்கள், வருடத்திற்கு ஒருமுறை சிடி ஸ்கேன் (CT Scan) பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

குடல் புற்றுநோய் (Colon Cancer): மலத்தில் ரத்தம் கலந்து வருகிறதா என்பதைக் கண்டறியும் மலப் பரிசோதனை (Faecal Blood Test) மூலம் குடல் புற்றுநோயைக் கண்டறியலாம்.

புராஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer):
ஆண்கள் வருடத்திற்கு ஒருமுறை பி.எஸ்.ஏ (PSA - Prostate-Specific Antigen) என்ற ரத்தப் பரிசோதனையைச் செய்துகொள்வதன் மூலம் இதைக் கண்டறியலாம்.

அனைத்து வகையான புற்றுநோய்களையும் ஆரம்பத்தில் கண்டறிவது எளிதல்ல. சிலவகை புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே ஸ்கிரீனிங் டெஸ்ட் மூலம் கண்டறிவது மிகவும் கடினம். அதாவது, மூளைப் புற்றுநோய் (Brain Cancer), வயிற்றுப் புற்றுநோய் (Stomach Cancer), கணையப் புற்றுநோய் (Pancreas Cancer), கல்லீரல் புற்றுநோய் (Liver Cancer) போன்றவை...

உடலில் அசாதாரண மாற்றங்கள் அல்லது அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

சிலவகை புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே ஸ்கிரீனிங் டெஸ்ட் மூலம் கண்டறிவது மிகவும் கடினம்.

உணவு முறையையோ அல்லது உடற்பயிற்சியையோ மாற்றாத நிலையிலும், எதிர்பாராத விதமாக உடல் எடை திடீரென குறைவது...
சருமத்தின் கீழ் புதிதாகத் தோன்றும், வலியற்ற அல்லது நாளுக்கு நாள் அளவில் பெரிதாகி வரும் கட்டிகள் மற்றும் தடிப்புகள்...
நீண்ட நாள்களாக இருக்கும் விவரிக்க முடியாத வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது மலம் மற்றும் சிறுநீரில் ரத்தம் கலந்து போதல்... நீண்ட நாள்களாகக் குணமாகாத இருமல் அல்லது குரலில் ஏற்படும் தொடர்ச்சியான கரகரப்பு... உடலில் புதிய மச்சங்கள் தோன்றுவது அல்லது ஏற்கெனவே உள்ள மச்சங்களின் அளவு, வடிவம் மற்றும் நிறத்தில் மாற்றங்கள் ஏற்படுவது... பெண்களுக்கு மாதவிடாய் காலத்துக்கு இடைப்பட்ட நாள்களில் ஏற்படும் ரத்தப்போக்கு, அசாதாரண ரத்தப்போக்கு... போன்ற அறிகுறிகள் இருந்தால் அலர்ட் ஆகி, உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

புற்றுநோயை ஆரம்பத்திலேயே வெல்ல, தகுந்த இடைவெளியில் (வருடத்திற்கு ஒருமுறை) மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்வதும், உடலின் எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனடி கவனம் கொடுப்பதும் மிக அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

ஒரே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை - லைபீரியா பெண்ணின் 3 நோய்களை வீழ்த்திய இந்திய மருத்துவர்கள்!

மருத்துவ உலகம் வியந்து பார்க்கும் ஒரு அசாத்திய சாதனை இந்தியாவின் குருகிராமில் உள்ள பாராஸ் மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்டுள்ளது.லைபீரியா நாட்டைச் சேர்ந்த 42 வயது பெண்மணி ஒருவர், எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி ... மேலும் பார்க்க

Doctor Vikatan: பல வருடங்களாகப் பார்க்கும் தையல் வேலை... அடி வயிற்று வலிக்குக் காரணமாகுமா?

Doctor Vikatan:நான் 10 வருடங்களாக டெய்லரிங் வேலை செய்து வருகிறேன். அதுதான் எங்கள் குடும்பத்துக்கான பிரதான வருமானம். என் வயது 55. சமீப காலமாக தையல் மெஷினில் தைக்கும்போது எனக்கு அடி வயிறு வலிக்கிறது. தை... மேலும் பார்க்க

வெயிலின் தாக்கத்தைக் குறைக்க உதவும் பானங்கள் - விறுவிறு கோடைகால வியாபாரம்!

சென்னை போன்ற பெருநகரங்களில் காலை எட்டு, ஒன்பது மணிக்கே வெயிலின் உக்கிரத் தாக்கம் தொடங்கி விடுகிறது. சாலையில் நடந்து செல்லும் மக்கள், பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் எனப் பலரும் வெயிலினால் பாதிக்கப... மேலும் பார்க்க

வெப்ப அலை, ஏசி வாழ்க்கை... கோடையில் கண்களுக்கு இரட்டை ஆபத்து!

கடந்த சில நாள்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாகி, சில இடங்களில் வெப்ப அலையும் பதிவாகி வருகிறது. குறிப்பாக சென்னை, வேலூர், திருத்தணி, கரூர் போன்ற பகுதிகளில் வெப்பந... மேலும் பார்க்க

Ebola: காய்ச்சல் இருக்கிறதா? காங்கோ, உகாண்டா, சூடானில் இருந்து வருபவர்களுக்கு இந்திய அரசு அட்வைஸ்!

Ebola வைரஸ் பரவல் தற்போது உலகின் தலைவலியாக மாறியுள்ளது.காங்கோ, உகாண்டா, தென் சூடான் ஆகிய நாடுகளில் மிக வேகமாக எபோலா வைரஸ் பரவி வருவதால், அந்த நாடுகளில் இருந்து வரும் இந்திய மக்கள் அல்லது பயணிகளுக்கு ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஸ்டீராய்டு எடுத்தால் கட்டுக்கோப்பான உடல்வாகு சாத்தியமா... எடை குறையுமா?

Doctor Vikatan: ஜிம் செல்பவர்கள் மற்றும் பாடிபில்டிங் செய்பவர்களிடையே உடலை விரைவாகக் கட்டமைக்க அனபாலிக் ஸ்டீராய்டு பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக மருத்துவ எச்சரிக்கைகள் வெளியாகி வருகின்றன. மர... மேலும் பார்க்க