செய்திகள் :

Ind vs Pak: `ஜாம்பவான்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திவிட்டோம்!' - போட்டி ரத்து குறித்து நிர்வாகம்

post image

அனைத்து சர்வதேச அணிகளின் முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் WCL போட்டி இங்கிலாந்தில் கடந்த 18-ம் தேதி தொடங்கியது.

இந்தத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என 6 அணிகள் விளையாடுகின்றன. இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் இன்று நடைபெறவிருந்தது.

WCL Cricket League
WCL Cricket League

இந்தப் போட்டியில் ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான், யூசுஃப் பதான் ஆகியோர் இந்தப் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, WCL போட்டி நிர்வாகம் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய அணி, பாகிஸ்தான் உடனான போட்டியில் அவசியம் விளையாட வேண்டுமா? எனக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதன் பிறகே, இந்திய வீரர்கள் பலரும் இந்தப் போட்டியிலிருந்து விலகினர்.

போட்டியை ரத்து செய்தது குறித்து WCL போட்டி நிர்வாகம், "எங்களின் ஒரே நோக்கம், ரசிகர்களுக்கு நல்ல, மகிழ்ச்சியான தருணங்களை வழங்குவதாகவே இருந்தது. பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்த ஆண்டு இந்தியாவுக்கு வருவதாக வந்த செய்தியை அறிந்திருந்தோம்.

சமீபத்திய இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கைப்பந்து போட்டியையும், மற்ற விளையாட்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான சில போட்டிகளையும் பார்த்து, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்கும் பொருட்டு WCL-ல் இந்தியா - பாகிஸ்தான் போட்டியைத் தொடர்ந்து நடத்தலாம் என்று நினைத்தோம்.

WCL About India - Pakistan Match Call Off
WCL About India - Pakistan Match Call Off

ஆனால், இந்தச் செயல்பாட்டில், பலரின் உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கிறோம். அதற்கு மேலாக, நாங்கள் எதிர்பாராத வகையில், நாட்டிற்கு பெருமை தேடித்தந்த எங்கள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திவிட்டோம்.

எனவே, இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக மீண்டும் மனமார்ந்த மன்னிப்பு கோருகிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

பட்டோடி டிராபி பெயர் மாற்றம் குறித்து மௌனம் களைத்த ஆண்டர்சன்... சச்சின் பற்றி என்ன கூறினார்?

இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளுக்கிடையே இங்கிலாந்து நடைபெறும் டெஸ்ட் தொடர் கடந்த 2007 முதல் பட்டோடி டிராபி தொடர் என்று அழைக்கப்பட்டு வந்தது.இவ்வாறிருக்க, தற்போது இங்கிலாந்து நடந்துகொண்டிருக்கும் தொடர... மேலும் பார்க்க

Eng vs Ind: "தோனியாகவோ, கோலியாகவோ சுப்மன் கில் ஆக முடியாது; ஏனெனில்.." - ஹர்பஜன் கூறும் காரணம் என்ன?

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில்லுக்கு, கேப்டனாக தன்னை நிரூபிக்க வேண்டிய ஒரு சோதனைத் தொடராக இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அமைந்திருக்கிறது.டெஸ்ட் தரவரிசையில் முதல் முறையாக இந்திய அணியை முதல... மேலும் பார்க்க

Eng vs Ind: "பும்ரா ஆடுகிறாரா இல்லையா என்பது முக்கியமல்ல; காரணம்..." - கிரெக் சேப்பல் சொல்வது என்ன?

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி மிக இக்கட்டான சூழலில் சிக்கும்போதெல்லாம் தனியாளாகப் போட்டியை வென்று தரக்கூடிய நட்சத்திர பவுலராக பும்ரா திகழ்கிறார்.ஆனால், அதுவே அவரது ஃபிட்னஸ் மீதான அழுத்தமாகவும் மாறியி... மேலும் பார்க்க

Andre Russell: "இந்தியாவுடனான அந்த செமி பைனல்தான் என் கரியரின் பெஸ்ட் மொமென்ட்" - பகிரும் ரஸல்

இந்தியாவில் 2016-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத ஐ.சி.சி தொடர்.தோனி கேப்டனாக விளையாடிய கடைசி ஐ.சி.சி தொடரான அதில், வங்கதேசத்துக்கெதிரான ஆட்டத்தில் கடைசி... மேலும் பார்க்க

"நானும் தோனியும்தான்..." - 2011 உலகக் கோப்பையில் யுவராஜ் தேர்வானது பற்றி மனம் திறந்த கேரி கிர்ஸ்டன்!

தோனி தலைமையிலான இந்திய அணி யுவராஜ் சிங் இல்லாமல் 2011-ல் சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றிருக்குமா என்றால் நிச்சயம் வாய்ப்பில்லை அல்லது கடினம் என்பதுதான் அதற்கான பதிலாக இருக்கும்.அந்தத் தொடர... மேலும் பார்க்க

Virat Kohli: "அவர் மீண்டும் டெஸ்ட் விளையாட வர வேண்டும்..." - முன்னாள் வீரர் மதன் லால் அழைப்பு

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவிய நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி ஓய்வைத் திரும்பப்பெற்றுவிட்டு களத்துக்குத் திரும்ப வேண்டுமென குரல் கொடுத்துள்ள... மேலும் பார்க்க