செய்திகள் :

India - Pakistan : `அவர்கள் சொல்வது அனைத்துமே பொய்; பெரிதாக எடுத்துகொள்ள வேண்டாம்’ - விக்ரம் மிஸ்ரி

post image

தற்போது நிலவி வரும் இந்தியா - பாகிஸ்தான் எல்லை பதற்றம் குறித்து இந்திய மக்களிடம் விளக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

அதில் இந்தியாவின் முன்னெடுப்புகள் மற்றும் பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ராணுவ கர்னல் சோபியா குரேஷி மற்றும் இந்திய விமானப்படையின் (IAF) விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கினார்கள்.

எதிர்வினை மட்டுமே..!

முதலில் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது...

``நான் முன்னரே பலமுறை கூறியுள்ளேன். இந்தப் பதற்றத்திற்கும், தூண்டுதல்களுக்கும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளே காரணம். பதிலுக்கு தான் இந்தியா பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது... எதிர்வினையாற்றி உள்ளது.

இன்று காலையில் இருந்து பாகிஸ்தான் பல தூண்டுதல் நடவடிக்கைகளை எடுத்து வருவதை பார்த்தோம்.

இந்திய வெளியுறவுத் துறையின் செய்தியாளர் சந்திப்பு
இந்திய வெளியுறவுத் துறையின் செய்தியாளர் சந்திப்பு

இந்தியா மீது தாங்கள் தொடுத்த பதிலடி தாக்குதல் என்று பாகிஸ்தான் கூறிய அனைத்துமே பலத்த பொய்கள் மற்றும் போலியான தகவல்கள் ஆகும்.

இந்தப் பொய்கள் அனைத்தும் பாகிஸ்தான் அரசின் அமைப்புகள் கட்டவிழ்த்து விட்டது ஆகும். சிர்சா, சுரத் வான் தளம் அழிப்பு, ராணுவ தளவாடங்கள் அழிப்பு, ஆதன்பூரில் உள்ள எஸ் 400 அழிக்கப்பட்டது, இந்தியாவின் சைபர் கட்டமைப்புகள் அழிப்பு என அவர்கள் கூறுவது அனைத்துமே பொய்.

பாகிஸ்தான் முன்னெடுக்கும் இந்தத் தவறான தகவல்களை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாப்பில் இருக்கும் மக்கள் மற்றும் மக்கள் வாழும் இடங்களை குறிவைப்பதாக பிரசாரம் செய்து வருகிறது. இதுமூலம் கிளர்ச்சியை உருவாக்க முயல்கிறார்கள்.

பிரிவினையை உருவாக்க முயல்வது...

இன்று காலை ராஜோரி மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதில் அந்த மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜ் குமார் தாப்பா உயிரிழந்துள்ளார். ஃபிரோஸ்பூர் மற்றும் ஜலந்தூரில் மக்கள் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் அதிகாரிகளும் அம்ரிஸ்டர் பகுதியில் ஏவுகணைகளை இந்தியா ஏவி வருவதாக பேசி வருகிறார்கள். இப்படி அவர்கள் பிரிவினையை உருவாக்க முயல்வது தோல்வியில் தான் முடியும்.

பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் தொலைகாட்சியில் பேசும்போது, இந்திய மக்கள் இந்திய அரசை பல்வேறு விஷயங்களில் விமர்சிக்கிறார்கள் என்று மகிழ்ச்சி கொள்வதை பார்த்தோம். இப்படி மக்கள் தங்களது அரசை விமர்சிப்பதை பார்ப்பதற்கு பாகிஸ்தானிற்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம். இது தான் ஜனநாயகத்தின் ஹால்மார்க். அதுக்குறித்து அவர்களுக்கு தெரியாது.

ஆப்கானிஸ்தானை இந்திய ஏவுகணை தாக்ககியது என்று குற்றசாட்டை முன்வைக்கிறார்கள். ஆனால், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்த நாடு அவர்களின் மக்களுக்கும், அவர்களது கட்டமைப்புகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்பதை நினைவுப்படுத்த தேவையில்லை என்று நினைக்கிறேன்.” என்றார்.

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதிகளை ஒழிக்கும் அரசு... ‘ஆன்லைன் பயங்கரவாதி’களைக் கண்டுகொள்ளாதது ஏனோ?

‘இலவச பங்கு முதலீட்டுப் பயிற்சி, இலவச டிரேடிங் டிப்ஸ், குறுகிய காலத்தில் அசாத்தியமான வருமானம், பிரபலங்கள் பேசுவதுபோல போலி வீடியோ, போலி சமூக வலைதளப் பக்கங்கள் எனப் பற்பல ரூபங்களில் முதலீட்டாளர்களைக் கு... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ஆண்டுக்கு ரூ.400 கோடிக்கு போலி மதுபானங்கள் தயாராகின்றன!’ – அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக

அ.தி.மு.க-வின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ``தமிழக அரசால் விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் மதுபானங்கள் புதுச்சேரி மாநிலத்தில் போலியாக தயாரிக்கப்படுகிறது. அதன்பிற... மேலும் பார்க்க

'அண்ணன் சீமானைவிட சில விஷயங்களில் வேல்முருகன் ஒருபடி மேல்!' - சொல்கிறார் நாதக நத்தம் சிவசங்கரன்!

நாம் தமிழர் கட்சி தொடங்கியதிலிருந்தே, அதில் பயணிக்கும் நத்தம் சிவசங்கரன் தற்போது மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வகிக்கிறார். ஆனால் அண்மைகாலமாக கட்சி நடவடிக்கைகளிலிருந்து அவர் ஒதுங்கியிருப்பத... மேலும் பார்க்க

'தவெகவும் பாஜகவும் ஒண்ணு..!' - திமுகவில் இணைந்த கோவை வைஷ்ணவி

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து, சமூகவலைதளங்களில் ஆக்டிவாக வலம் வந்தார். சமூகவலைதளங்களில் விஜய் மற்றும் தவெகவுக்கு ஆதரவாக பேட்டியளித்து பிரபல... மேலும் பார்க்க

``போலீஸ் சிரிக்கிறாங்க... தெய்வச்செயல் மேல நடவடிக்கை எடுக்கணும்’’ - ஆளுநர் மாளிகை முன்பு அழுத மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தி.மு.க இளைஞரணி முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி அளித்த வன்கொடுமை விவகாரத்தை நேற்று தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். மேலு... மேலும் பார்க்க

Gaza: தரை வழி உதவியைத் தடுக்கும் இஸ்ரேல்; வான் வழியே உதவியதா சீனா... வைரல் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்துவரும் போரில் காஸா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 2, 2025 அன்று காஸாவில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் நிறுத்தியது. அதனால் தற்போது இஸ்ரேலின் ராணுவத்தால் கா... மேலும் பார்க்க