செய்திகள் :

IPL Retentions : மீண்டுமொரு சீசனில் தோனி; CSK கூண்டோடு வெளியேற்றப்போகும் வீரர்கள்? - IPL அப்டேட்ஸ்!

post image

ஐ.பி.எல் மினி ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியுன் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல் நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும். இதற்கான கெடு நாளையோடு முடிவடையவிருக்கிறது. இந்நிலையில், எந்தெந்த வீரர்களை அணிகள் விடுவிக்கப் போகின்றன எந்தெந்த வீரர்களை ட்ரேடிங் முறையில் வாங்கப் போகின்றன என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Dhoni - Sanju Samson
Dhoni - Sanju Samson

ராஜஸ்தான் அணியிலிருந்து சஞ்சு சாம்சனை வாங்கிவிட்டு அதற்கு ஈடாக ஜடேஜாவையும் சாம் கரணையும் கொடுக்க சென்னை அணி தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இரு அணிகளுக்கு இடையேயும் இந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டதாகவும் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிடுவர் என்றும் கூறுகின்றனர்

மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோவிலிருந்து ஷர்துல் தாகூரையும் குஜராத்திலிருந்து ரூதர்போர்டையும் ட்ரேடிங் முறையில் வாங்கிவிட்டதாக அந்த அணியே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. சச்சினின் மகனான அர்ஜூன் டெண்டுல்கரையும் அந்த அணி விடுவிக்கவிருக்கிறது.

Shardul Thakur
Shardul Thakur

கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயர் மற்றும் அவர்களின் கேப்டன் ரஹானேவை விடுவிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கொல்கத்தா அணி கே.எல்.ராகுலை ட்ரேடிங் முறையில் அணிக்குள் கொண்டு வர ஆர்வம் காட்டுவதாகவும் கூறுகின்றனர்.

அதேமாதிரி, சன்ரைசர்ஸ் அணியிலிருந்து ஹென்றிச் க்ளாசனும் வெளியேறும் முடிவில் இருக்கிறாராம். சன்ரைசர்ஸிலிருந்து ஷமியை வாங்க டெல்லியும் லக்னோவும் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்.

Dhoni - Vijay Shankar
Dhoni - Vijay Shankar

சென்னை அணியின் முகமான தோனி மேலும் ஒரு சீசனில் ஆடவிருக்கிறார் என்பதை அந்த அணி சிஇஓ காசி விஸ்வநாதனே உறுதி செய்திருக்கிறார். கடந்த சீசன் சென்னை அணிக்கு மிக மோசமான சீசனாக அமைந்தது. ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா போன்றோர் சோபிக்கவே இல்லை. அவர்களை கூண்டோடு சென்னை அணி வெளியேற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை விடுவிக்குமென உங்களின் கணிப்புகளை கமெண்ட் செய்யுங்கள்.

'திராவிட மாடல் ஆட்சி, விளையாட்டின் பொற்காலம்!' - உதயநிதி பெருமிதம்!

சர்வதேச ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைப் போட்டி சென்னையிலும் மதுரையிலும் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலி... மேலும் பார்க்க

IPL: சென்னை அணியில் சஞ்சு சாம்சன்? விடைபெறும் ஜடேஜா?! - இந்த ட்ரேடிங் மூலம் யாருக்கு லாபம்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வரும் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சென்னை அணி வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சாம்சனுக்கு பதில் ஜடேஜாவையும் சாம் கரணையும் சென்னை அணி ராஜஸ்தானுக்கு விட்ட... மேலும் பார்க்க

உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரமகளுக்கு அங்கீகாரம்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கும் இந்தச் சூழலில், அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு மாநில அரசுகள் அளித்த கௌரவம் உணர்வுப்பூர்வமானது. ஆந்திரப் ... மேலும் பார்க்க

`எனது தாத்தா சொன்னார்' - இந்திய அணிக்கு விளையாட குடியுரிமையை சரண்டர் செய்த ஆஸி., கால்பந்து வீரர்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் அடிப்படையில் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர். அவரின் பெற்றோர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் ஆவார். வில்லியம்ஸ் குடும்பத்தினர் அவரது ... மேலும் பார்க்க

Ind v Aus: "இந்தியாவிடம் அடைந்த தோல்வி இன்னும் வலிக்கிறது"- ஆஸ்திரேலிய கேப்டன் அலிஷா ஹீலி

கடந்த ஞாயிற்று கிழமை (நவ. 2) நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்... மேலும் பார்க்க

`RCB அணி விற்பனைக்கு.!’ - விரும்பும் பூனாவாலா; களத்தில் குதிக்கும் அதானி - அணியின் மதிப்பு தெரியுமா?

ஆர்.சி.பி எனப்படும் ராயல் சேலஞ்சர் பெங்களூரு ஐ.பி.எல் கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரது நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த டி... மேலும் பார்க்க