செய்திகள் :

Operation Honeymoon: "சோனம் மீது சந்தேகம் வர இதான் காரணம்..." - மேகாலயா டிஜஜி சொல்வது என்ன?

post image

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சியும், அவரது மனைவி சோனமும் கடந்த மாதம் 21ம் மேகாலயாவிற்குத் தேனிலவிற்குச் சென்றனர்.

சென்ற இடத்தில் அவர்கள் இருவரும் கடந்த 23ம் தேதி திடீரென காணாமல் போய்விட்டார்கள். அவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் மலைப்பள்ளத்தாக்கில் ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் மீட்கப்பட்டது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ராஜா ரகுவன்சியின் மனைவி சோனமும், அவரது காதலன் ராஜ் என்பவரும் சேர்ந்து கூலிப்படை அமைத்து இக்கொலையைச் செய்திருப்பது தெரிய வந்தது.

இக்கொலையில் தொடர்புடைய சோனம், ராஜ் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுவிட்டனர்.

அவர்களை போலீஸார் ஷில்லாங் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட் அவர்களை 8 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

இக்கொலை குறித்து மேகாலயா டிஜஜி மாரக் கூறுகையில், ''சோனமும், அவரது கணவரும் தங்கி இருந்த ஹோட்டல் விடுதி அறையில் சோதனை செய்து பார்த்தபோது சூட்கேஸில் சோனத்தின் தாலியும், ஒரு மோதிரமும் இருந்தது.

அதில்தான் எங்களுக்கு சோனம் மீது முதலில் சந்தேகம் வந்தது. திருமணாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தேனிலவுக்கு வந்த இடத்தில் எப்படி பெண் தனது தாலியைக் கழற்றி வைத்துவிட்டுச் செல்வார் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது.

அவர்கள் கொலை செய்த பிறகு ஒரு ஸ்கூட்டரில் சோனமும் மற்றொரு கொலைகாரனும் சென்றனர். மற்றொரு ஸ்கூட்டரில் வேறு இருவர் சென்றனர். அவர்கள் ராஜாவின் உடலை எடுத்துச் சென்று ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திலிருந்து கீழே தூக்கிப் போட்டனர்.

சோனம் மற்றும் ராஜாவிடம் இரண்டு போன்கள் உண்டு. அதில் ஒன்றுதான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்ற போன்களை தேடி வருகிறோம். கொலைக்கு உண்மையான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்.

கொலையாளி ராஜ் இப்போதுதான் 12 முடித்துள்ளான். அவன் சோனம் குடும்பத்திற்குச் சொந்தமான பர்னிச்சர் கடையில் கணக்கு எழுதும் வேலை செய்து வந்தான்'' என்று தெரிவித்தார்.

தாம்பத்தியத்தை அனுபவிக்க விடாத சோனம்

சோனம் மற்றும் ராஜாவிற்குக் கடந்த மாதம் 11ம் தேதியே திருமணம் நடந்துவிட்டது. ஆனால் திருமணத்திற்குப் பிறகுத் தனது கணவனுடன் உறவு வைத்துக்கொள்வதை சோனம் தள்ளிப்போட்டு வந்துள்ளார்.

இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சோனம் தனது கணவரிடம் முதலில் நாம் கவுகாத்தியில் இருக்கும் காமாக்யா கோயிலில் வழிபட்ட பிறகுதான் திருமண வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று கூறி, ராஜாவை நம்ப வைத்திருக்கிறார்.

அதை ராஜாவும் நம்பி மனைவியுடன் உறவு வைத்துக்கொள்ளாமல் இருந்துள்ளார். அவர்கள் மேகாலயா சென்ற பிறகு அங்கிருந்து கவுகாத்தி செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

 சோனம் - ரகுவன்ஷி
சோனம் - ரகுவன்ஷி

ஆனால் திருமண வாழ்க்கையைத் தொடங்கும் முன்பு கணவனைக் கொலை செய்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் காதலன் துணையோடு கூலிப்படையைக் கூடவே சோனம் அழைத்து வந்துள்ளார்'' என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

அவர்கள் கடந்த மாதம் 21ம் தேதி மேகாலயா சென்றவுடன் 22ம் தேதியே ராஜாவைக் கொலை செய்ய முயன்றனர். ஆனால் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இருந்ததால் அவர்களால் கொலை செய்ய முடியாமல் போய்விட்டது.

எனவேதான் 23ம் தேதி ஆட்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்குத் தனது கணவனை சோனம் அழைத்து சென்றதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

36 words / 339 characters

``உடல், மன ரீதியான பிரச்னை..'' - கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க துரை தயாநிதி மனு

அரசுக்கு ரூ.259 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ஒலிம்பஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்க துரை தயாநிதி தரப்பில் மனு... மேலும் பார்க்க

பீகார்: பாஜக கொடியுடன் வந்த SUV கார்; காவலர்கள் மீது மோதியதில் பெண் காவலர் பலி; ஒட்டுநர் கைது

பீகார் மாநிலம் பாட்னாவின் ஸ்ரீகிருஷ்ணா பூரி பகுதிக்கு அருகே, அடல் பாத் பகுதியில் வாகனப் பரிசோதனையிலிருந்த காவல்கள் மீது கார் மோதியது.வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மூன்று காவலர்களும் உடனடியாக அருகி... மேலும் பார்க்க

Ooty: ஈட்டி மரங்கள் மீது அத்துமீறல்; பிரபல கான்ட்ரக்டர் ராயன் மீது வழக்கு; வனச் சட்டம் சொல்வது என்ன?

நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்‌ மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் இந்த வகை மரங்கள் காணப்படுகின்றன.தன... மேலும் பார்க்க

திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்கியது எப்படி?

திருச்சி, கே.கே.நகரில் உள்ள இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்.இவர், தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில் உள்ள திருச்சி, கொட்டப்பட்டு கிராமம், அன்பில் நகரில் சுமார் 5920 சதுரடி உள்ள காலிமனைக்கு ... மேலும் பார்க்க

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.7 லட்சம் லஞ்சம்? - ஆசிரியர் புகார்... சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு!

வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ஆசிரியரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆசிரியர் ராமச்சந்திரன்வருமான வரி மோசடி புகார் தொ... மேலும் பார்க்க

திரிபுரா: இளைஞரைக் கொன்று ஐஸ்கிரீம் பெட்டியில் வைத்த நபர்; முக்கோண காதல் விவகாரத்தில் என்ன நடந்தது?

திரிபுரா மாநிலம் அகார்த்தலாவைச் சேர்ந்த சரிபுல் இஸ்லாம் (28) என்ற வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார்.இது தொடர்பாக சரிபுல் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக... மேலும் பார்க்க