செய்திகள் :

Russia - Ukraine: முடிவுக்கு வருகிறதா ரஷ்யா vs உக்ரைன் போர்; பேச்சுவார்த்தைக்கு புதின் அழைப்பு!

post image

அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ (NATO) அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்தது.

அதன்பிறகு, எத்தனையோ பேச்சுவார்த்தைகள், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் கண்டங்கள் ஆகியவை எதையும் பொருட்படுத்தாமல் 3 ஆண்டுகளாக நிற்காமல் உக்ரைன் மீது போர் நடத்திவருகிறது ரஷ்யா.

இந்த நிலையில்தான், போர் தொடர்பாக உக்ரைனுடன் இஸ்தான்புல்லில் மே 15-ம் தேதி நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின்.

ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர்

இது குறித்து புதின், "மோதலுக்கான மூல காரணங்களை நீக்குவதற்கும், அமைதியை மீட்டெடுப்பதற்குமான முயற்சியாக இஸ்தான்புல்லில் உக்ரைனுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை ரஷ்யா முன்மொழிகிறது.

2022-ல் உக்ரைன்தான் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டது, ரஷ்யா அல்ல. எனவே, எந்த முன்நிபந்தனைகளும் இல்லாமல் உக்ரைன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம்.

ஏற்கெனவே நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், உக்ரைன் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரின் முயற்சியால் ஒரு கூட்டு வரைவு ஆவணம் தயாரிக்கப்பட்டது.

ஜெலன்ஸ்கி (உக்ரைன்) - புதின் (ரஷ்யா)
ஜெலன்ஸ்கி (உக்ரைன்) - புதின் (ரஷ்யா)

ஆனால், மேற்கத்திய நாடுகளின் வற்புறுத்தலின் பேரில், அது குப்பையில் வீசப்பட்டது என்பதை இங்கு நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். ரஷ்யா பலமுறை போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இருப்பினும், எங்களின் போர் நிறுத்த திட்டங்கள் எதற்கும் உக்ரைன் அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.

முன்பு, இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட 3 நாள்களில், 5 முறை ரஷ்ய எல்லையைத் தாக்க முயற்சிகள் மேற்கொண்டது உக்ரைன்" என்று தெரிவித்திருப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, இஸ்தான்புல்லில் மே 15-ம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்த கையெழுத்தாகலாம் என்று கூறப்படுகிறது.

'கொலை மிரட்டல் விடுத்தவரை கண்டறியாமல் விளம்பரப்படுத்துவதா?' - வேலுமணி வருத்தம்!

கோவை அதிமுக அலுவலகத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது வேலுமணி செய்தியாளர்களுக்கு... மேலும் பார்க்க

’மத்திய வரிகளில் மாநிலத்திற்கு 50% வேண்டும்’- நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் கலந்து கொண்டனர்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `பாண்லே நஷ்டத்தில் இயங்குகிறது… பாதி ஊழியர்களை காணவில்லை’ – அப்செட்டான முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி குருமாம்பேட்டில் இயங்கி வரும் அரசின் பாண்லே நிறுவனத்தில், 20,000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்திக் கூடம் அமைக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டி நேற்று துவக்கி வைத்தார். அப்போது பேசிய ... மேலும் பார்க்க

நிதி ஆயோக்: முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பும்… திமுக-வின் குற்றச்சாட்டுகளும்!

நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிதி ஆயோக் கூட்டத்தை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் ஆட்சிக் குழு கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை தொடங்கியிர... மேலும் பார்க்க

Trump: 'இதை செய்யவில்லை என்றால், ஆப்பிள் நிறுவனத்துக்கு 25% வரி விதிக்கப்படும்' - மிரட்டும் ட்ரம்ப்

ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கி... மேலும் பார்க்க

'விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு' - பிரேமலதாவின் கணக்கு என்ன?

தே.மு.தி.க மீது மாறி, மாறி கூட்டணி பேரம் பேசும் கட்சி என்கிற விமர்சனம் இருக்கிறது. இதை உடைக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் உறுதியாக இருந்தார், பிரேமலதா. தே.மு.தி.க தலைவர... மேலும் பார்க்க