செய்திகள் :

SIR: "பாதகமான வாக்குகளை நீக்குகிறார்கள்" - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

post image

தேர்தல் ஆணையம் செயல்படுத்தவிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது திமுக அரசு.

இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் SIR நடவடிக்கையை எதிர்ப்பது ஏன் என விளக்கியுள்ளார். அவர், "பீகார் மாநிலத்துல என்ன நடந்துருக்குங்கறத நீங்களே வெளிச்சம் போட்டு காட்டிட்டு இருக்கீங்க. இன்னைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நம்முடைய முதலமைச்சர் தலைமையில் கூட இருக்கிறது. அதில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடைய கருத்துக்களையும் முதலமைச்சர் கேட்டு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவார்.

தேர்தல் ஆணையம் - SIR
Election Commission - SIR

எங்கெங்க தேர்தல் நடக்குதோ அங்கதான் வந்து ஒன்றிய பாஜக அரசுக்கு சாதகமான வாக்குகளை மட்டும் வச்சுக்கிட்டு, அவங்களுக்கு பாதகமா இருக்கக்கூடிய எல்லாவற்றையும் நீக்குகிற பணிகளில் வெளிப்படையாகவே ஈடுபட்டுட்டு இருக்காங்க. இதற்கு நம்ம எதிர்ப்பு தெரிவிச்சிருக்கிறோம்.

தமிழ்நாட்டுல வெல்வதற்கான வாய்ப்பு பாஜகவுக்கு கிடைக்கிறது இல்ல. மக்கள் அந்த வாய்ப்பை அவங்களுக்கு கொடுக்கறது இல்ல. எனவே எப்படியாவது இதைப் பயன்படுத்தியாவது அவங்க வெற்றி பெறணும்னு முயற்சியில ஈடுபட்டுருக்காங்க." எனப் பேசியுள்ளார்.

தொடர்ந்து மழைக்காலத்தை எதிர்கொள்ள அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், "நாங்க கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே முதலமைச்சர் தலைமையிலே அனைத்து அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், மேயர், துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வரவச்சு தொடர்ச்சியா மீட்டிங் நடத்திகிட்டு இருக்கோம். இந்த வருஷம்னு கிடையாது. கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகவே இதை முதலமைச்சர் வலியுறுத்திட்டு இருக்காரு.

Udhayanidhi Stalin

இந்த வருஷம் நிறைய பிரிபரேஷன் பண்ணிருக்கோம். ரெண்டு மூன்று நாள் நல்லா மழை பெய்ஞ்சது இப்ப விட்டுருக்கு.

இப்போ மழை விட்டதுனால இந்த கடந்த மூணு நாட்களாக ரோட் பேட்ச் ஒர்க்ஸ்லாம் எல்லா இடத்துலயும் வேகமா போயிட்டு இருக்கு...

அடுத்து ஒரு வாரத்துக்கு மழை இல்லைன்னு சொல்லிருக்காங்க. அரசு சைடுல இருந்து அனைத்து வேலைகளும் சிறப்பா பண்ணிட்டு இருக்கறோம். பொதுமக்களும் அவங்களுடைய ஆலோசனை சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்." எனப் பேசியுள்ளார்.

Delhi Blast: "அந்தக் காட்சிகள் உண்மையிலேயே இதயத்தை உடைக்கின்றன" - மு.க.ஸ்டாலின் அறிக்கை!

டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைகள் முடுக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் தேசிய புலனாய்வு ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: மும்பை, சென்னை, கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு; நிலைமையை ஆராயும் பிரதமர் மோடி!

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த சக்திவாய்ந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பிற நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல... மேலும் பார்க்க

Delhi Blast: 8 பேர் பலி; மோடி ஆய்வு; நாடு முழுவதும் பதற்றம்! | Live

தமிழகத்தில் பலப்படுத்தப்படும் பாதுகாப்புதமிழகத்தில் பாதுகாப்பு சோதனைகள்"டெல்லி பாதுகாப்பில் அலட்சியம்" - அரவிந்த் கெஜ்ரிவால் கவலைமுன்னாள் Delhi முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "ரெட் ஃபோர்ட் அருகே வெட... மேலும் பார்க்க

TN -ல் SIR -ஐ எதிர்க்கும் BJP, ஆதரித்து வழக்கு தொடுத்த ADMK | ECI EPS STALIN TVK | Imperfect Show

* SIR: "வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம்... அச்சமாக இருக்கிறது" - முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணம்* “SIR படிவங்களை அனைத்து வீடுகளுக்கும் வழங்க 8 நாட்களே போதும்” -எடப்பாடி பழனிசாமி* CAA-NRC-ஐ ஆதரித்த அ... மேலும் பார்க்க

``அதிமுக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை; கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறார்கள்" - ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் டி எம் எஸ் எஸ் பள்ளியில் காணொளி காட்சி மூலம் அன்புச் சோலை திட்டத்தை (முதியோர் பராமரிப்பு மையத்தை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் ஐ. பெரியசாமி, திண்... மேலும் பார்க்க