செய்திகள் :

SIR: ``வாக்களார் பட்டியலை சரிபார்ப்பது அவசியம்தான்; ஆனால்'' - மநீம தலைவர் கமல் சொல்வதென்ன?

post image

சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் S.I.R. விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திமுக அரசு, விஜய்யின் தவெக உள்பட 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தவெக, அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்திருக்கின்றன.

மு.க ஸ்டாலின்
மு.க ஸ்டாலின்

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியிருக்கும் மநீம தலைவரும், எம்.பியுமான கமல், "வாக்களார் பட்டியலை சரிபார்ப்பது அவசியம்தான். ஆனால் 'S.I.R' எனும் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை ஏன் இவ்வளவு அவசரமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த அவரசத்தினால்தான் பிகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு வாக்களிக்கும் உரிமையை இழந்தார்கள்.

குறிப்பிட்ட 12 மாநிலங்களில் மட்டுமே இந்த சிறப்புத் தீவிரத் திருத்தத்தை செயல்படுத்த முயற்சிப்பதன் உள்நோக்கம் என்ன?

இதனால் இந்த தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை வரலாற்றில் இல்லாத அளவிற்குக் குறைந்துவிட்டது. கர்நாடகா, மகாராஷ்டிராவில் வாக்குத் திருட்டு தொடர்பாக எழுந்த நியமான சந்தேகங்கள் இதுவரை தீர்க்கப்படவில்லை. வாக்குச் சாவடிகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை வெளியிடுவதில் ஏன் தயக்கம்?

S.I.R விவகாரம் குறித்து கமல் ஹாசன் பேசியிருக்கிறார்.
Kamal Haasan - கமல் ஹாசன்

சிறப்புத் தீவிரத் திருத்தம் செய்ய அலுவலர்கள் ஒரு வீட்டிற்குச் சென்று, வீட்டில் யாரும் இல்லை என்பதையெல்லாம் காரணம் காட்டி, அவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவது அபத்தமானது. இதுபோன்ற அபத்தமான காரணங்களைக் காட்டி தகுதியுடைய வாக்காளர்களை நீக்கிவிடக்கூடாது.

இந்த S.I.R -ல் இருக்கும் பல குறைகளைத் தீர்க்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் மீது எழும் அவநம்பிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது. நடுநிலைமையோடு செயல்படுகிறோம் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் இருக்கிறது.

அவசர கோலத்தில் இந்த 'S.I.R'யை செயல்படுத்தாமல், குறைகளை சரி செய்து நிதானமாக 2026 சட்டமன்ற தேர்தல் முடிந்தபிறகு செயல்படுத்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் வேண்டுகோள்" என்று பேசியிருக்கிறார்.

Army Chief: ``அமெரிக்க அதிபருக்கு கூட தெரியாது" - மாணவர்களிடம் மனம் திறந்து உரையாற்றிய ராணுவத் தளபதி

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதியின் சொந்த ஊர் மத்தியப் பிரதேசத்தின் ரேவா. தன் சொந்த ஊரானா ரேவாவில் உள்ள டிஆர்எஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு மத்தியில் ஜெனரல் உபேந்திரா திவேதி உரையாற்றினார்.... மேலும் பார்க்க

"S.I.R. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்" - தவெக தலைவர் விஜய் விளக்கம்

சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் S.I.R. விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திமுக அரசு, விஜய... மேலும் பார்க்க

ஆந்திரா கோயிலில் ஏகாதசி கூட்ட நெரிசல்: 10 பேர் பலி; பிரதமர், ஆந்திர முதல்வர் வருத்தம்!

இன்று ஏகாதசி என்பதால், அனைத்து முக்கிய கோயில்களுக்கும் பக்தர்கள் கூட்டமாகச் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.அவ்வகையில், ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுகாவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர ... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு: களத்தில் இறங்கிய பிரேசில் இராணுவம்; துப்பாக்கிச் சூட்டால் 132பேர் பலி

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரம், அரசக் காலத்திலிருந்தே குற்றச் செயல்கள், கடத்தல், காங்க்ஸ்டர் குழுக்கள், போராட்டக் குழுக்கள் பதுங்கியிருக்கும் நகரமாக இருந்தது.இப்போது கடந்த சில ஆண்டுகளாக அங்கு ... மேலும் பார்க்க

தேசிய அறிவியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்கள் 3 பேர் தேர்வு!

சென்னை ஐஐடியைச் சேர்ந்த 3 பேராசிரியர்​கள் 'தேசிய அறி​வியல் விருது'க்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.ஆண்​டு​தோறும் மத்​திய அரசு தேசிய அறி​வியல் விருதுகளை வழங்கி வருகிறது. இவ்விருது விஞ்​ஞான் ரத்​னா, வ... மேலும் பார்க்க

"அரசியலில் அவதூறுகள், அடிகள் எல்லாம் வரத்தான் செய்யும்" - தவெக ராஜ்மோகன் பேட்டி

தவெக பிரச்சாரத்தின் போது நடந்த கரூர் கூட்டநெரிசலில் 41பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, விஜய்யும், தவெகவினரும் இப்போதுதான் மெல்ல மெல்ல வெளியில் வரத் தொடங்கியிருக்கின்றனர். இரண்டு நாள்களுக்கு முன்ப... மேலும் பார்க்க