செய்திகள் :

SIR: 5.6 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கம்; கோவை மாவட்ட நிலவரம்

post image

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கிய பணிகள் டிசம்பர் 11-ம் தேதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை

இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "வாக்காளர்களிடம் பூர்த்தி செய்து பெறப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் உடனடியாக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் சனிக்கிழமை (6.12.2025) வரை 5,06,394 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், இறப்பு தொடர்பாக 1,13, 861 பேரும், கண்டறிய முடியாதவை, இடமாற்றம், இரட்டைப் பதிவு தொடர்பாக 3,92,533 பேரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

SIR - சிறப்பு தீவிர திருத்தம்
SIR - சிறப்பு தீவிர திருத்தம்

அதிகபட்சமாக தொண்டாமுத்தூர் தொகுதியில் 70,439 பெயர்களும், அதற்கு அடுத்தபடியாக கோவை வடக்கு தொகுதியில் 66,525 பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன.

இதேபோல கவுண்டம்பாளையம் தொகுதியில் 64,072 பெயர்கள், கிணத்துக்கடவு தொகுதியில் 58,545 பெயர்கள், சிங்காநல்லூர் தொகுதியில் 54,354 பெயர்கள், கோவை தெற்கு தொகுதியில் 46,894 பெயர்கள், சூலூர் தொகுதியில் 43,465 பெயர்கள், மேட்டுப்பாளையம் தொகுதியில் 41,079 பெயர்கள், பொள்ளாச்சி தொகுதியில் 31,720 வாக்காளர்கள், வால்பாறை தொகுதியில் 29,691 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.“ என்று கூறியுள்ளனர்.

கோவை

படிவங்களை செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 11-ம் தேதிக்குள் கோவையில் மேலும் 1 லட்சம் பெயர்கள் நீக்கப்படவுள்ளன. இதன் மூலம் கோவையில் 6 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

'நீங்கள்தான் பொறுப்பு' இண்டிகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிக்கு 'Show-cause Notice'; தவறினால்?

கடந்த சில நாள்களாக, இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான இண்டிகோ விமானங்களின் பயணங்கள் ரத்தாகி வருகின்றன. இதனால், பல ஆயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.என்ன பிரச்னை?சமீபத்தில் இந்திய அரசு கொண்... மேலும் பார்க்க

``நேருவுக்கும் ஸ்டாலினுக்கும் பஞ்சாயத்து; கொள்ளையடிக்கும் திமுக சேர்மன்" - கராத்தே தியாகராஜன் பேட்டி

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்காக சென்னை மாநகராட்சியில் நடந்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தின்போது, பாஜக சார்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கராத்தே த... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சுனு இப்போ முருகனைத் தொட்டு பாக்றீங்க" - சீமான்

கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் ஆண்டுதோறும் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும் நிலையில், இந்தாண்டு மலை உச்சியில் தீபம் ஏற்றியே ஆக வேண்ட... மேலும் பார்க்க

`தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறவில்லை' - ஐ.பெரியசாமி கருத்து

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி டாக்டர். அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் ப... மேலும் பார்க்க

அதிமுக: "இபிஎஸ்-ஐ ஆஹா ஓஹோவென புகழ்ந்தவர்தானே செங்கோட்டையன்" - செல்லூர் ராஜு சாடல்!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமி... மேலும் பார்க்க

``எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?" - நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது.தமிழ்நாடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விவாதப் பொருளாகியிருக்கிறது.`தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவதற்கு ... மேலும் பார்க்க