செய்திகள் :

``SIR-ஐ நடத்த தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ உரிமையே இல்லை" - மக்களவையில் காங்கிரஸ் கடும் வாதம்

post image

பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவசர அவசரமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்ட தேர்தல் ஆணையம் (EC), அதன் தொடர்ச்சியாக அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடமும், உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றன.

அதோடு, நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் SIR பற்றி விவாதம் நடத்தப்பட வேண்டும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில் மக்களவையில் இன்று SIR விவாதம் நடைபெற்றது.

மக்களவை
மக்களவை

தேர்தல் ஆணையர் நியமனச் சட்டத்தில் திருத்தும் வேண்டும்!

விவாதத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி, ``முதலில் தேர்தல் சீர்திருத்தமாக, தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான 2023 சட்டத்தைத் திருத்த வேண்டும்.

இந்தத் தேர்வுக் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்கட்சித் தலைவர், கேபினட் அமைச்சர் இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

இதில் என்னுடைய பரிந்துரை என்னவென்றால், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய இரண்டு பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும். அத்தகைய குழு அமைக்கப்பட்டால், அது தேர்தல் ஆணையம் மீதான சந்தேகங்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இங்கு இருக்கும் பலர் தேர்தல் ஆணையத்தின் நடுநிலை குறித்து கேள்விகளை எழுப்ப வேண்டிய அவசியத்தில் இருக்கின்றனர்.

SIR நடத்த தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை!

பிரிவு 327 ஆனது வாக்காளர் பட்டியல் மற்றும் எல்லை நிர்ணயத்திற்கான சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்துக்கு உரிமை அளித்திருக்கிறது. இன்று பல மாநிலங்களில் SIR நடக்கிறது.

ஆனால், SIR-ஐ நடத்த சட்டப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு உரிமை இல்லை. அரசியலமைப்பிலோ அல்லது சட்டத்திலோ SIR நடவடிக்கைக்கு எந்தவொரு ஏற்பாடும் இல்லை.

ஏதாவது தொகுதியின் வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறு இருந்தால், அதை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்து பகிரங்கப்படுத்த வேண்டிய காரணங்களுக்காக, அதைச் சரிசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உள்ளது.

அப்போதுதான் நீங்கள் SIR-ஐ நடத்த முடியும். தவிர முழு பீகார் அல்லது முழு கேரளாவுக்கும் SIR நடத்த முடியாது.

காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி (Manish Tewari)
காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி (Manish Tewari)

பல தவறுகள் ஒரு சரியை உருவாக்காது!

SIR நடத்த வேண்டுமென்றால் முதலில் எழுத்துப்பூர்வமாகப் பிரச்னைகளைப் பதிவு செய்த பிறகு, வாக்காளர் பட்டியலில் சிக்கல் உள்ள தொகுதிகளில் தனித்தனியாகச் நடத்துங்கள்.

எனவே, எழுத்துப்பூர்வ காரணங்கள் எங்கே என்று அரசாங்கத்திடம் கேட்கிறேன். இப்போது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் SIR நடவடிக்கையை நிறுத்துங்கள்.

SIR-ஐ தொடர்வதற்கான அனுமதி சட்டத்தில் இல்லை. அப்படியென்றால் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட SIR சட்டவிரோதமானவை என்று நீங்கள் கூறுவீர்கள். அதற்கு என்னுடைய பதில், பல தவறுகள் ஒரு சரியை உருவாக்காது.

இந்திய ஜனநாயகத்தில் இரண்டு பங்குதாரர்கள் உள்ளனர். ஒன்று வாக்களிக்கும் வாக்காளர்கள், மற்றொன்று அதில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள். 1988-89ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, வாக்களிக்கும் வயதை 21-லிருந்து 18 ஆகக் குறைத்ததன் மூலம் மிகப்பெரிய தேர்தல் சீர்திருத்தம் செய்தார்" என்று கூறினார்.

பாமக: "அவமானபட்டிருக்கேன்; யாரையும் சும்மா விடமாட்டேன்" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

சென்னை மகாபலிபுரத்தில் பாமக பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று( டிச.9) அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றிருக்கிறது. அதில் பேசிய அன்புமணி ராமதாஸ், " இதுவும் கடந்துபோகும் என்று நானும் எவ்வளவோ விஷயங்களைத் தா... மேலும் பார்க்க

வந்தே மாதரம் : `எந்த விவாதங்களுக்கும் நாங்கள் யாரும் பயப்படுவதில்லை' - கொந்தளித்த அமித் ஷா

இந்தியாவின் தேசியப் பாடலான `வந்தே மாதரம்' பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நேற்று (டிச.8) சிறப்பு விவாதம் நடைபெற்றது.பிரதமர் மோடி, மக்களவையி... மேலும் பார்க்க

TVK: `இந்தியாவில் ரேஷன் கடைகள் இல்லாத மாநிலமா புதுச்சேரி?’- விஜய் குற்றச்சாட்டு உண்மையா?

புதுச்சேரி துறைமுக மைதானத்தில் இன்று மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய த.வெ.க தலைவர் விஜய், புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் பிரச்னைகள் குறித்துப் பேசினார். அப்போது, `இந்தியாவில் ரேஷன... மேலும் பார்க்க

இஷா சிங்: 'மும்பை பின்னணி, மனித உரிமை ஆர்வலர்' புதுவையில் ஆனந்திடம் கறார் காட்டிய பெண் காவலர் யார்?

கட்சி ஆரம்பித்த பிறகு புதுச்சேரியில் முதல் முதலாக நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். தவெகவின் இந்தப் பொதுக்கூட்டத்துக்கு எக்கச்சக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நி... மேலும் பார்க்க

இந்திய அரிசிகளுக்கு வரியை அதிகரிக்கிறாரா ட்ரம்ப்? இதில் பாதிக்கப்பட போவதென்னவோ அமெரிக்காதான்

இந்தியா உடனான பேச்சுவார்த்தை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது... இந்திய பிரதமர் மோடி என் நல்ல நண்பர்... இந்தியா உடனான விரிசல் தற்காலிகமானது தான்... என்று கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து அமெரிக்க அத... மேலும் பார்க்க

``புதுச்சேரி அரசைப் பார்த்து திமுக அரசு கத்துக்கணும்" - த.வெ.க தலைவர் விஜய் தாக்கு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக பொதுவெளியில் புதுச்சேரியில் இன்று மக்களைச் சந்தித்தார்.புதுச்சேரி அரசால் 5,000 பேருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்ட பொத... மேலும் பார்க்க