செய்திகள் :

Siragadikka aasai : மனோஜுக்கு ஏற்பட்ட பெரிய விபத்து, கதையில் முக்கியத் திருப்பம்?!

post image

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் கதையில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனோஜுக்கு விபத்து நேர்ந்து கண்களில் அடிப்பட்டுள்ளது போன்ற காட்சிகள் ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது.

நேற்றைய எபிசோடில் மீனா விஜயாவுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பார்வதி  வீட்டிற்கு வருகிறார். அங்கு சிந்தாமணி மீனாவை அவமானப்படுத்துகிறார். விஜயாவும் அவருடன் சேர்ந்து மீனாவை அவமானப்படுத்துகிறார். மீனா அவர்களுக்கு பதிலடிக் கொடுத்துவிட்டு கிளம்புகிறார்.

அதன் பிறகு விஜயாவின் டயட் தொடர்பான காமெடி காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதோடு நேற்றைய எபிசோட் முடிவில் வெளியான ப்ரோமோவில் ரோகிணியின் மலேசியா மாமாவாக நடிக்கும் மணி மனோஜின் ஷோரூமுக்கு வருகிறார்.

அவரின் தங்கை மகனின் திருமணத்திற்கு சீராகக் கொடுக்க தேவையான எலெக்டிரானிக் பொருட்களை வாங்க வேண்டும். நான் அவனுக்கு டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் நான் வாங்கி கொடுக்கப் போகிறேன் என்று சொல்கிறார். உங்க ஷோரூமில் வாங்கிக் கொள்கிறேன் என்கிறார். ரோகிணி அதிர்ச்சியாகிறார். அந்த சமயத்தில் அங்கு மனோஜ் இல்லை. ஆனால் முத்துவும் அண்ணாமலையும் அங்கு வருகின்றனர்.

மணி தலையில் ஹெல்மெட் போட்டுக் கொள்கிறார். ஆனால் முத்துவுக்கு சந்தேகம் வருகிறது. ஷோ ரூமுக்குள் யார் ஹெல்மெட் போட்டுக் கொண்டுள்ளார் என்று யோசிக்கிறார். முத்து அவரை கண்டுப்பிடிப்பாரா மாட்டாரா என்பது அடுத்து வரும் எபிசோடுகளில் தெரியும்.

இதனிடையே நேற்றிரவு வெளியான மற்றொருப் ப்ரோமோவில், மனோஜ் மருந்தகத்தில் இருந்து வெளியே வரும் போது சாலைக்கு மற்றொருப் பக்கத்தில் தன்னை ஏமாற்றி வீட்டை விற்ற கதிர் காருக்குள் ஏறுவதை பார்க்கிறார். அவரை பின்தொடர்ந்து ஓடும்போது மனோஜ மீது ஒரு வேன் மோதுகிறது. மனோஜுக்கு அந்த விபத்தில் கண்களில் பலத்த காயம் ஏற்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மனோஜுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரோகிணிக்கு தகவல் சொல்லப்படுகிறது. ரோகிணி விஜயாவிடம் சொல்கிறார். மனோஜின் கண்களில் கட்டுப் போடப்பட்டுள்ளது. ரோகிணியிடன் இனிமே என்னாலப் பார்க்கவே முடியாதா என்று கேட்கிறார். ரோகிணி அவரை சமாதானப்படுத்துகிறார்.

மனோஜின் பார்வை சரியாகும் வரை ரோகிணி தான் பார்த்துக் கொள்வார். அவர்களின் காதல் அதிகரிக்கும். அப்படியான சூழலில் ரோகிணியின் கடந்த கால வாழ்க்கைப் பற்றி தெரிய வந்தாலும் மனோஜ் விட்டுக் கொடுக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`துணிஞ்சு ஆரம்பிச்சிட்டோம்; ஆனா ஹெவி வேலை..!’ - மிர்ச்சி செந்தில் - ஶ்ரீஜா ஜோடியின் புது பிசினஸ்

நடிகர் மிர்ச்சி செந்தில் - ஶ்ரீஜா தம்பதி, கேரள மாநிலம் திருவல்லாவில் புதிய ஹோட்டல் ஒன்றைத் திறந்துள்ளனர். ஹோட்டலின்நிர்வாகத்தைஶ்ரீஜா கவனித்துக் கொள்கிறாராம்.எஃப்.எம். ரேடியோ பிரபலமாக இருந்த சமயத்தில்,... மேலும் பார்க்க

``சிவராத்திரிக்கு தமிழ்நாட்டில் இருக்க மாட்டேன்; சிவன் எழுத்தைப் பார்க்கப் போறேன்" - நடிகை மதுமிதா

'சின்ன பாப்பா பெரிய பாப்பா' உள்ளிட்ட சில டிவி நிகழ்ச்சிகளிலும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' முதலிய சில படங்களிலும் நடித்தவர் நடிகை மதுமிதா. விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும்கலந்து கொண்டவர். நடிப்பு தா... மேலும் பார்க்க

பையனூரில் அடுக்குமாடி குடியிருப்பு - சினிமா, டிவி நட்சத்திரங்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு!

கடந்த 2010-ம் ஆண்டு திமுகஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் 1000 ஏக்கரில் திரைப்பட நகரம் அமைக்க உத்தரவிட்டிருந்தார் அப்போதையமுதல்வர் கருணாநிதி. அந்த பகுதியின் உள்ளேயே சினிமா மற்றும் சின்னத்திரை... மேலும் பார்க்க

Ethirneechal : ஆதி குணசேகரன் ஆட்டம் ஆரம்பம்; இம்முறையாவது பெண்கள் அணி ஜெயிக்குமா?

எதிர்நீச்சல் சீரியலின் முதல் பாகத்தில் குணசேகரன் தன் தங்கை ஆதிரைக்கு கரிகாலனுடன் கட்டாயத் திருமணம் செய்து வைப்பார். அந்த திருமணத்தை நிறுத்த ஜனனி, நந்தினி, ஈஸ்வரி ஆகியோர் (பெண்கள் அணி) பல முயற்சிகளை மே... மேலும் பார்க்க

திடீரென நீக்கப்பட்ட இயக்குநர்; நடிகையுடனான பிரச்னை காரணமா? `வள்ளியின் வேலன்' தொடரில் என்ன நடக்கிறது?

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'வள்ளியின் வேலன்'. 'கலர்ஸ்' சேனலில் ஒளிபரப்பான 'திருமணம்' தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமான சித்து - ஸ்ரேயா ஜோடி திருமணத்துக்குப் பின் ... மேலும் பார்க்க

Siragadikka Aasai: மீனாவால் பொசசிவ் ஆகும் ரோகிணி... ஆழமாகும் அருண்-சீதா நட்பு; அடுத்து என்ன?

சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோடில் பரசு தன் மகளின் திருமணத்திற்குப் பத்திரிக்கை வைக்க அண்ணாமலை வீட்டிற்கு வருகிறார். முத்து, மீனா, ரவி ஆகியோர் மகிழ்ச்சியுடன் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்க விஜயா... மேலும் பார்க்க