செய்திகள் :

Spiders: தங்களுடைய வலைகளையே சாப்பிடும் சிலந்திகள்; அறிவியல் சொல்லும் காரணம் தெரியுமா?

post image

சிலந்திகள் சிக்கலான வலைகளைப் பின்னி அதைத் தங்கள் இருப்பிடமாகவும், இரையைப் பிடிக்கும் பொறியாகவும் பயன்படுத்துகின்றன என்பது பலருக்கும் தெரியும். ஆனால், பழைய அல்லது சேதமடைந்த வலைகளை அவை உண்பது குறித்து தெரியுமா?

இந்தப் பழக்கம், சிலந்திகளை உயிர்வாழ வைப்பதற்கும் இயற்கையின் சுழற்சிக்கு உதவுவதாகவும் உள்ளது.

சிலந்தி வலைகள் பட்டுப்புரதங்களால் ஆனவை. இவை சிலந்தியின் உடலிலுள்ள சுரப்பிகளால் உருவாக்கப்படுகின்றன. ஒரு வலையை உருவாக்குவதற்கு அதிக ஆற்றலும் நேரமும் தேவைப்படுகின்றன.

JUMBING SPIDER
JUMBING SPIDER

வலைகள் பழையதாகி, அழுக்காகி, அல்லது பூச்சிகளைப் பிடிக்கும் திறனை இழக்கும்போது, சிலந்திகள் அதை உண்கின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் பழைய வலைகளில் உள்ள புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அவை மீண்டும் பெற்றுக்கொள்கின்றன.

பழைய வலைகளை உண்பதன் மூலம், சிலந்திகள் புதிய புரதங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மறுசுழற்சி செய்யப்பட்ட புரதங்களைப் பயன்படுத்தி புதிய வலைகளை உருவாக்குகின்றன.

இந்த ஆற்றல் சேமிப்பு முறை, உணவுப் பற்றாக்குறை உள்ள சூழல்களில் சிலந்திகள் உயிர்வாழ பெரிதும் உதவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீலகிரி: கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய பெண் சிறுத்தை - போராடி மீட்ட வனத்துறை

நீலகிரியில் அதிகரித்து வரும் காடழிப்பு காரணமாக வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் தேயிலை தோட்டங்களில் தஞ்சமடைந்து வருகின்றன. தடுப்பு வேலிகள், சுருக்கு கம்பிகள், மின் வேலிகள் போன்றவற்றில் சிக்கி வனவ... மேலும் பார்க்க

ஊட்டி: டாஸ்மாக் பாராக மாறிய நீர்நிலை - வனவிலங்குகள் பாதிப்பு; வனத்துறை, வருவாய்த்துறை அலட்சியம்!

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது காட்டேரி அணை. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த அணையிலிருந்து அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு ... மேலும் பார்க்க

1 லட்சம் சிலந்திகளுடன் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலை கண்டுபிடிப்பு - எங்கே தெரியுமா?

ருமேனிய விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலையைக் கண்டுபிடித்துள்ளனர். கிரீஸ்-அல்பேனியா எல்லையில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்ட குகைக்குள், சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் சிலந்திகள் ஒன்றாக வசிக்கும் இந்த... மேலும் பார்க்க

நுரையீரல் இல்லாமலும் சுவாசிக்கும் தவளைகள் - சுவாரஸ்யத் தகவல்கள்

தவளைகள், நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய உயிரினம் என்று பலருக்கும் தெரியும். அவை நுரையீரல்கள் இல்லாமலேயே தங்கள் தோல் மூலம் சுவாசிக்கும் திறன் கொண்டது என்பது பலருக்கும் தெரியாது. இதுகுறித்து விரிவாக தெ... மேலும் பார்க்க

தென்காசி: யானை - மனித மோதல்களைத் தடுக்க பூர்வீகத் தாவரங்கள் நடவு; வனத்துறை திட்டத்தின் பின்னணி என்ன?

தென்காசி மாவட்டத்தில், சமீபகாலமாக மனித-யானை மோதல் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. உணவுத் தேவைக்காக யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது, இங்குள்ள விளை நிலங்களைச் சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து ... மேலும் பார்க்க

சீனாவில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டையிடும் பாறை; அறிவியல் சொல்லும் ரகசியம் இதுதான்

சீனாவின் குயிசூ மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பாறை, சுமார் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டை வடிவிலான பெரிய கற்களை வெளியிடுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த விசித்திரமான நிகழ்வு விஞ்ஞா... மேலும் பார்க்க