செய்திகள் :

US Judges: 17 நீதிபதிகளைப் பணிநீக்கம் செய்த ட்ரம்ப்; அமெரிக்காவில் கடும் சர்ச்சை.. பின்னணி என்ன?

post image

அமெரிக்க ட்ரம்ப் அரசாங்கம், சமீபத்தில், 17 நீதிபதிகளை பணியில் இருந்து நீக்கியுள்ளது.

யார் இந்த நீதிபதிகள்?

இது குறித்து நீதிபதிகள் சங்கம், "எந்தவொரு காரணமும் இல்லாமல், கடந்த வெள்ளிக்கிழமை 15 நீதிபதிகளும், திங்கட்கிழமை 2 நீதிபதிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றம் | அமெரிக்கா
உச்ச நீதிமன்றம் | அமெரிக்கா

இவர்கள் கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ் போன்ற 10 மாகாணத்தை சேர்ந்த நீதிபதிகள் ஆவார்கள்.

இவர்கள் 17 பேரும் குடிவரவு நீதிமன்றத்தை சேர்ந்த நீதிபதிகள் ஆவார்கள்" என்று கூறுகிறது.

"இது அறிவற்ற செயல். நீதிபதிகளை வேலையில் இருந்து நீக்குவதைக் காட்டிலும், அதிக நீதிபதிகளை வேலைக்கு எடுக்க வேண்டும். காரணம், பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன" என்றும் நீதிபதிகள் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.

பின்னணி என்ன?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஆவணம் செய்யப்படாமல் அமெரிக்காவில் குடியேறுபவர்களை வெளியேற்றுவதிலும், வெளியேற்றப்பட வேண்டும் என்பதிலும் மும்முரமாக இருக்கிறார்.

மேலும், அரசுக்கு எதிராக பேசுபவர்கள், செயல்களை செய்பவர்களையும் வெளியேற்றி வருகிறார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அப்படி வெளியேற வேண்டும் என்று கூறப்படுபவர்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடுகின்றனர். நீதிமன்றமும் அவர்களுக்கு ரத்துகளையும், கால அவகாசங்களையும் கொடுக்கிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தான், நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று கருதப்படுகிறது. இன்னும் பல நீதிபதிகள் பணியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை பெரியார் நூலக கட்டத்தில் திருஷ்டி படம் - அமைச்சர் எ.வ.வேலு சொல்வது என்ன?

கோவை காந்திரபுரம் பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு இன்று ஆய்வு செய்தார்.கோவை ப... மேலும் பார்க்க

``என் உயிருக்கு ஆபத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும்'' - டிஎஸ்பி சுந்தரேசன்

மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி சுந்தரேசன், அமைச்சர் மெய்யநாதன் எஸ்காட்டிற்கு வேண்டும் என தன் வாகனத்தை வாங்கி கொண்டனர். அதன் பின்னர் வாகனத்தை தராததால் அவர் நடந்தே அலுவலகம் செல்வது போன்ற வீடியோ வெளியா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: இஸ்லாம்பூர் டு ஈஷ்வர்பூர் - பெயர் மாற்றத்தின் பின்னணி என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர் என்ற நகரின் பெயரை ஈஷ்வர்பூர் என மாற்றியுள்ளது அந்த மாநில பாஜக அரசு. சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடைசி நாளான நேற்று (18.07.2025) இந்த ... மேலும் பார்க்க

OPS: தடுமாறி நிற்கும் ஓபிஎஸ்? விஜய் பக்கமாக சாய்கிறாரா? - அடுத்தக்கட்ட மூவ் என்ன? | In Depth

ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர், ஒரு பெரும் சமூகப் பின்னணியைக் கொண்டவர் என ஓ.பி.எஸ்ஸூக்கு எத்தனையோ வலுவான அடையாளங்கள் இருந்தாலும், இன்றைய தேதிக்கு அவர் அரசியலில் தன்... மேலும் பார்க்க

Donald Trump: ``BRICS நாடுகளின் இறக்குமதிக்கு 10% கூடுதல் வரி..'' - ட்ரம்ப் மிரட்டுவது ஏன்?

வளரும் நாடுகள் கூட்டமைப்பான BRICS-ல் உள்ள நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10% கூடுதல் வரி விதிப்பதாக மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.இந்த கு... மேலும் பார்க்க

M.K.Muthu: கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.மு.க.முத்து - ஸ்டாலின் கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர் மு.க.முத்து. பூக்காரி, பிள்ள... மேலும் பார்க்க