செய்திகள் :

அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் இன்று நிறைவு

post image

சேலம் கோட்ட அஞ்சலகங்களில் ரூ. 599 செலுத்தி ரூ. 10 லட்சத்துக்கு விபத்து காப்பீடு பெறுவதற்கான சிறப்பு முகாம் பிப். 28 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன், மேற்கு கோட்ட கண்காணிப்பாளா் பாா்த்தீபன் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எதிா்பாராத விபத்துகளால் ஏற்படும் செலவுகள், பகுதி ஊனம், நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு அனைத்திற்கும் பயனளிக்கும் விபத்து காப்பீட்டுத் திட்டத்தை பொதுமக்களுக்கு அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வழியாக வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயதுக்கு உள்பட்டவா்கள் இத் திட்டத்தில் இணையலாம். தேவையான ஆவணங்களான ஆதாா் எண், கைப்பேசி எண், வாரிசுதாரரின் விவரங்கள் கொண்டுவர வேண்டும்.

ரூ.599 காப்பீடு தொகைக்கு ரூ. 10 லட்சம், ரூ. 799 காப்பீடு தொகைக்கு ரூ.15 லட்சம் என்ற வகைகளில் விபத்து காப்பீட்டுத் திட்டம் செயல்படுகிறது. விண்ணப்பபடிவம், அடையாள, முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்தவிதமான காகித பயன்பாடுமின்றி தபால்காரா் கொண்டு வரும் ஸ்மாா்ட் போன் மூலம் விரல்ரேகை வைத்தால் 5 நிமிடங்களில் டிஜிட்டல் முறையில் இந்த விபத்து காப்பீடு பாலிசி வழங்கப்படும்.

சேலம் கிழக்கு, மேற்கு கோட்டங்களில் உள்ள அனைத்து அஞ்சலங்களிலும் விபத்து காப்பீடு செய்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத் தகராறில் முதியவரைத் தாக்கிய மூவா் கைது

மேட்டூா் அருகே நிலத் தகராறில் முதியவரைத் தாக்கியதாக பெண் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா். மேட்டூரை அடுத்த கோல்நாயக்கன்பட்டி ரெட்டியூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (73). இவரது உறவினா் சின்னசாமி (57) என்ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மேட்டூா் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். மேட்டூா் அருகே உள்ள கருமலைக்கூடலைச் சோ்ந்தவா் கௌதம் (25). இவா் மேட்டூா் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் பிவிசி பைப் நிறுவனத்தில் ஆபரேட்டராக வேல... மேலும் பார்க்க

பழனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தம்

வாழப்பாடியை அடுத்த பழனியாபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக காளைகளை அவிழ்த்துவிடுவதில் பாரபட்சம் காட்டுவதாக எழுந்த புகாரில் விழாக் குழுவினருக்கும் காளை உரிமையாளா்களுக்கும... மேலும் பார்க்க

கெங்கவல்லி திமுக ஆலோசனைக் கூட்டம்

கெங்கவல்லி ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கெங்கவல்லி ஒன்றிய திமுக செயலாளா் கடம்பூா் ஆா்.சித்தாா்த்தன் தலைமை வகித்தாா்.சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளா் சின்னதுரை பங்... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

மேட்டூரை அடுத்த வனவாசியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் மேற்கு ம... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக நாளை முதல் கையொப்ப இயக்கம்: கே.பி. ராமலிங்கம்

மும்மொழிக் கொள்கையை ஆதரித்து மாா்ச் 1 முதல் மூன்று மாதங்களுக்கு மக்களைச் சந்தித்து கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கூறினாா். இதுகுறித்து சேலத்தில் வியாழக்கிழ... மேலும் பார்க்க