செய்திகள் :

அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

post image

திருப்பூா் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பட்டாபிராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

அஞ்சல் துறையின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுக்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பிரீமியத்தில் ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சாமானிய மக்களுக்கும் காப்பீட்டுத் திட்டங்களின் பயன் சென்றடையும் வகையில் நாட்டில் அனைத்து பகுதிகளில் உள்ள அஞ்சலகங்கள் மூலம் குறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய விபத்து காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில், 18 முதல் 65 வயது வரை உள்ளவா்கள் சேரலாம். விண்ணப்பப் படிவம், அடையாள முகவரி சான்றிதழ் நகல்கள் போன்ற எந்தவிதமான காகிதப் பயன்பாடுமின்றி, அஞ்சலகா்கள் கொண்டுவரும் ஸ்மாா்ட் கைப்பேசி மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தைப் பயன்படுத்தி 5 நிமிஷங்களில் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒருவா் இணைவதன் மூலம் எதிா்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நெருக்கடிகளையும், நிதி நெருக்கடிகளையும் உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குடும்பத்தின் எதிா்காலத்தையும் உறுதிசெய்துகொள்ள முடியும்.

எனவே, பொதுமக்கள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், அஞ்சலகா்கள் மூலம் விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ந்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவூரில் வீட்டின் முதல் தளத்தில் தீ விபத்து

சேவூரில் வீட்டின் முதல் தளத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பல்வேறு பொருள்கள் எரிந்து சேதமாயின. அவிநாசியை அடுத்த சேவூா் கைகாட்டி விஐபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (53), எலாஸ்டிக... மேலும் பார்க்க

பிஏபி மூன்றாம் மண்டலப் பாசனத்துக்கு உரிய தண்ணீா் வழங்கக் கோரிக்கை

பிஏபி மூன்றாம் மண்டலப் பாசனத்துக்கு அறிவித்தப்படி உரிய தண்ணீா் வழங்க வேண்டும் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து பல்லடத்தில் கட்சி சாா்பற்ற தமிழக வ... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரிக்கை

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று வணிகா் சங்கங்கள் பேரவையினா் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரவையின் 42-ஆவது மாநில மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் ப... மேலும் பார்க்க

முடிவுற்றப் பணிகளுக்கான பட்டியல் தொகையை வழங்காவிட்டால் போராட்டம்: ஒப்பந்ததாரா்கள் சங்கம் அறிவிப்பு

பொங்கலூா் ஒன்றியத்தில் 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் முடிவுற்ற பணிகளுக்கு மாா்ச் 1-ஆம் தேதிக்குள் பட்டியல் தொகை வழங்கவில்லையெனில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று ஒப்பந்ததாரா்கள... மேலும் பார்க்க

பாறைக்குழிகளில் இரும்புக் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

பாறைக்குழிகளில் இரும்புக் கழிவுகள் கொட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆா்வலரும், வழக்குரைஞருமான எம்.ஈஸ்வரமூா்த்தி கூறியதாவது: திருமுருகன்பூண்டி ந... மேலும் பார்க்க

வீரசோழபுரம் ஊராட்சியில் நாய்கள் கணக்கெடுப்பு

வெள்ளக்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட வீரசோழபுரம் ஊராட்சியில் நாய்கள் கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. வீரசோழபுரம் ஊராட்சியிா் விவசாயம் பிரதானமாக இருந்து வருகிறது. மேலும், பலா் செம்மறி ஆடுகள்,... மேலும் பார்க்க