செய்திகள் :

அண்ணா நகர் முதன்மை சாலைகளில் வாகன நிறுத்தத்திற்கு அனுமதி!

post image

அண்ணா நகர் முதன்மை சாலைகளில் வாகனம் நிறுத்தம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் சிறப்பு திட்டங்கள் துறை சார்பில் அண்ணாநகர் பகுதியில் உள்ள தெருக்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகரில் On Street வாகன நிறுத்த செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக, வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் நடவடிக்கைகளை 2017 முதல் பெருநகர சென்னை மாநகராட்சி தொடங்கியது.

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்திடமிருந்து (CUMTA) பார்க்கிங் கொள்கை இறுதிச் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வாகன நிறுத்தம் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்காக 19 இடங்களில் சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதில் 10 இடங்களில் வாகனம் நிறுத்தங்களை நிர்வாகத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: நாளை விசாரணைக்கு ஆஜராக முடியாது; என்ன செய்ய முடியும்? - சீமான் பேட்டி

அந்த அடிப்படையில் சென்னை அண்ணா நகர் பகுதிகளில் உள்ள முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சாலைகளில் பார்க்கிங் நிர்வாகத்தை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது.

அதன்படி தெருவுக்கு வெளியே ஏற்படுத்தப்பட உள்ள வாகன நிறுத்தங்களில் ஒரு மணி நேரத்திற்கு இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.10, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 20 வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஒரு மணி நேரத்திற்கு மேல் இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ. 20, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 40, இலகு ரக மற்றும் கனரக சரக்கு வாகனங்களுக்கு ரூ. 60 கட்டணம் வசூலித்துக் கொள்வதற்கு மாமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், மாநகராட்சி ஆணையரால் பார்க்கிங் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்குரிய கட்டணத்தை வாகன உரிமையாளர்களிடம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் 5 கடற்கரைகளின் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்க முடிவு!

சென்னையில் உள்ள 5 கடற்கரைகளின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.சென்னை ரிப்பன் மாளிகையில் மாதந்திர மாமன்றக் கூட்டமானது பெருநகர சென்னை மாநகராட... மேலும் பார்க்க

கும்மிடிபூண்டி செல்லும் ரயில்கள் இன்று ரத்து

சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமை (பிப். 27, மாா்ச் 1) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க

கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம்- எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சி காரணமாக கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் கூறினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலைய... மேலும் பார்க்க

சம்பல்பூா் - ஈரோடு ரயில் சேவை நீட்டிப்பு

சம்பல்பூா் - ஈரோடு சிறப்பு ரயில் சேவை ஏப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிஸா மாநிலம் சம்பல்பூரிலிருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் சிற... மேலும் பார்க்க

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க மாணவா் தூதுவா் குழு: அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் அமைக்க திட்டம்

உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும், சமூகத்தில் அது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கிலும், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவா் தூதுவா் குழு அமைக்கப்படும் என மாநில உறுப்பு மாற்று... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மகா சிவாரத்திரி பெருவிழா: சென்னையில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு

தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மகா சிவாரத்திரி பெருவிழா வெகு விமரிசையாக புதன்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் சாா்பில், கபாலீசுவரா் விளையாட்டு மைத... மேலும் பார்க்க