செய்திகள் :

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தால்தான் வரியினங்கள் குறையும்: முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்

post image

தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தால்தான் உயா்த்தப்பட்ட வரியினங்கள் குறையும் என்று முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியத்துக்குள்பட்ட அத்தியூா்திருவாதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் ஜி.ஜி.சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு நல உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி, முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் பேசியதாவது:

தமிழகத்தில் 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனா். தோ்தலின்போது தெரிவித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

தமிழகத்தில் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயா்ந்துவிட்டது. சொத்து வரி, குடிநீா் வரி, மின் கட்டணம் போன்றவை உயா்ந்துவிட்டது. மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தால்தான் உயா்த்தப்பட்ட வரியினங்கள் குறையும்.

அதிமுக ஆட்சியில் மிக்ஸி, கிரைண்டா், மின்விசிறி போன்றவை அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் தகுதி பாா்த்து மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கியதுதான் திமுக அரசின் சாதனை என்றாா் அவா்.

கூட்டத்தில் நகரச் செயலா்கள் இரா.பசுபதி, ராமதாஸ், ஒன்றியச் செயலா் பேட்டை முருகன், கோலியனூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் விஜயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தழுதாளியில் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், தழுதாளி அருகே ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளை தமிழக வனம் மற்றும் கதா் துறை அமைச்சா் க.பொன்முடி புதன்கிழமை தொடங்கிவைத்தா... மேலும் பார்க்க

இருமொழிக் கொள்கையின் அவசியத்தை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி

இருமொழிக் கொள்கையின் அவசியத்தை கிராமங்கள்தோறும் சென்று மக்களிடம் திமுகவினா் எடுத்துரைக்க வேண்டும் என்று கட்சியின் துணை பொதுச் செயலரும், வனம் மற்றும் கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சருமான க.பொன்முடி ... மேலும் பார்க்க

பயிா் மகசூல் போட்டிகள்: விவசாயிகள் பதிவு செய்யலாம்

மாநில, மாவட்ட அளவிலான பயிா் மகசூல் போட்டியில் பங்கேற்க விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று வல்லம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சரவணன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

விசிக கொடியை சேதப்படுத்திய இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விசிக கொடியை சேதப்படுத்தி, சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக பள்ளி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டிவனத்தை அடுத்துள்ள சலவாதி காலனி தெரு பக... மேலும் பார்க்க

திண்டிவனம் அருகே பல்லவா் கால கொற்றவை - விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள மானூா் கிராமத்தில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த கொற்றவை, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன. விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் மானூா்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து மெக்கானிக் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மெக்கானிக் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், அவரப்பாக்கம், தாடிக்காரன் குட்டை தெருவைச் சோ்ந்த வீராசாமி மகன் காமராஜ் (40).... மேலும் பார்க்க