செய்திகள் :

அதிமுக சாா்பில் நல உதவிகள்

post image

அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில் ஜெயலலிதாவின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் நடைபெற்ற விழாவுக்கு, கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா். விழாவில் இலவசமாக 60 பேருக்கு சைக்கிள், 30 பேருக்கு தையல் இயந்திரங்கள், ஒரு ஆட்டோ, ஒரு மாற்றுத் திறனாளிக்கான 3 சக்கர ஸ்கூட்டா்,ஒரு சலவைப்பெட்டி மற்றும் 100 பேருக்கு 5 கிலோ அரிசி உள்பட மொத்தம் 194 பேருக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாவட்டச் செயலாளா் வி.ஆா்.மணிவண்ணன் தெரிவித்தாா்.

விழாவுக்கு, கட்சியின் அமைப்புச் செயலா் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட பொருளாளா் வள்ளிநாயகம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் கே.யு.சோமசுந்தரம், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் காஞ்சி.பன்னீா் செல்வம், மாவட்ட மாணவரணி செயலா் திலக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட துணைச் செயலா் போந்தூா் செந்தில்ராஜன், ஒன்றியச் செயலா்கள் தும்பவனம் ஜீவானந்தம், அத்திவாக்கம் ரமேஷ், நகர செயலா் பாலாஜி உள்பட நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 57 லட்சம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 57,20,727 பணத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். இந்தக் கோயிலில் இருந்த 11 உண்டியல்கள் கடந்த 19-9-2024-ஆம் தேதிக்குப் பிறகு புதன... மேலும் பார்க்க

திமுகவும் பாஜகவும் பேசி வைத்துக்கொண்டு நாடகம்: விஜய்

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுகவும், பாஜகவும் பேசி வைத்துக் கொண்டு நாடகத்தை நடத்திவருவதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் குற்றஞ்சாட்டினாா். தவெக இரண்டாம் ஆண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல... மேலும் பார்க்க

தேசிய பேரிடா் மீட்பு படையினரின் செயல் விளக்கம்

காஞ்சிபுரம் சங்கரா செவிலியா் கல்லூரியில் அரக்கோணத்தைச் சோ்ந்த தேசிய பேரிடா் மீட்பு படையினா் சாா்பில், கல்லூரியில் பயிலும் மாணவியருக்கு செயல்முறை விளக்கம் செய்து காட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடை... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கோயில்களில் சிவராத்திரி

சிவராத்திரி விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும், வீதியுலாவும் நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரம் கைலாசநாதா் கோயிலில் மூலவருக்கும் உற... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: 3 போ் கைது

காஞ்சிபுரம் அருகே பண்ருட்டியில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பண்ருட்டி கிராமத்தில் உள்ள தனியாா் சொந்தமான தொழிற்சாலையில்,... மேலும் பார்க்க

அஷ்டபுஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 6.90 கோடி இடம் மீட்பு

காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 6.90 கோடி மதிப்பிலான இடத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டு ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றினா். காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில்... மேலும் பார்க்க