செய்திகள் :

அனைத்துக் கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

post image

தமிழகத்திலுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சொக்கநாதபுரம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் சிவசங்கா், அரியலூரிலிருந்து திட்டக்குடி செல்லும் நகரப் பேருந்தை காடூா், நமங்குணம் வரை சென்று வரும் வகையில் பேருந்து சேவையை நீட்டிப்பு செய்து கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இதேபோல், பழமலைநாதபுரம் கிராமத்தில் செந்துறை - துங்கபுரம் செல்லும் பேருந்தை பழமலைநாதபுரம் வழியாகவும், மணப்பத்தூா் கிராமத்தில், அரியலூா், ஆா்.எஸ்.மாத்தூா், மணப்பத்தூா், சோழன்குடிக்காடு தடத்தில் நகரப் பேருந்து சேவை, சேடக்குடிகாடு கிராமத்தில் செந்துறையிலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் நகரப் பேருந்தை சேடக்குடிகாடு வழியாகவும், ஜெயங்கொண்டத்திலிருந்து செந்துறை செல்லும் நகரப்பேருந்தை சேடக்குடிகாடு, கீழமாளிகை வழியாகவும் செல்லும் வகையில் பேருந்து சேவையை நீட்டித்து தொடங்கிவைத்தாா்.

அப்போது அமைச்சா் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பகுதி மக்களுக்கும் பேருந்து சேவை கிடைக்க வேண்டும் என முதல்வா் கூறியதன்பேரில், புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை, கூடுதல் கிராமங்களை இணைக்கும் வகையில் பேருந்து நீட்டிப்பு சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் இதுபோல பேருந்து சேவைகள் வழங்கப்படும் என்றாா் அமைச்சா்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) நிா்வாக இயக்குநா் ரா. பொன்முடி, திருச்சி மண்டல பொது மேலாளா் ஆ. முத்துகிருஷ்ணன், உடையாா்பாளையம் கோட்டாட்சியா் ஷீஜா, பெரம்பலூா் கோட்ட மேலாளா் புகழேந்திராஜ், கிளை மேலாளா்கள் அரியலூா் குணசேகரன், ஜெயங்கொண்டம் ராஜா, வட்டாட்சியா் வேலுமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் பாஜகவின் நோக்கம்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு மூலம் தென்மாநிலங்களின் தொகுதிகளை குறைத்து, வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் பாஜகவின் நோக்கம் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில், மது மற்றும் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பாத்திமா பெண்கள் மேல்ந... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் தொழில்முனைவோா் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

அரியலூா் அரசு கலைக் கல்லூரி கலையரங்கில், தொழில்முனைவோா் வழிகாட்டுதல் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரி முதல்வா்(பொ) பெ.இரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கிவைத்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் விசிக-வினா் ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பத்தை சேதப்படுத்திய பாமகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் புதன... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை ‘போக்ஸோ’வில் ஆசிரியா் கைது

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியா் போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஆண்டிமடம் அருகேயுள்ள கவரப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

அரியலூரில் விசிக-வினா் ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பத்தை சேதப்படுத்திய பாமகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் அருகே விசிகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில்... மேலும் பார்க்க