செய்திகள் :

அமெரிக்கா: காவலர் பயிற்சி மையத்தில் வெடி விபத்து! 3 அதிகாரிகள் பலி!

post image

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள காவலர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற வெடி விபத்தில், 3 அதிகாரிகள் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கலிஃபோர்னியாவின், லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்திலுள்ள காவலர் பயிற்சி மையத்தில், அதிகாரிகள் சில வெடி பொருள்களைக் கொண்டு நேற்று (ஜூலை 18) பயிற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, காலை 7.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட வெடிப்பில் 3 அதிகாரிகள் பலியானதாக, அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, உடனடியாக அங்கு மீட்புப் படையினர் விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, லாஸ் ஏஞ்சலீஸ் மேயர் கரண் பாஸ் கூறுகையில், அந்நகர தீயணைப்புப் படை, ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பயிற்சி மையத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கலிஃபோர்னியாவில் 40 ஆண்டுகளில் முதல்முறையாக அரசுப் படையின் பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்நாட்டு அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: இஸ்ரேல் மீதான புதிய ஏவுகணைத் தாக்குதல் முறியடிப்பு! விமான நிலையம் தற்காலிக மூடல்!

Three officers have been killed in an explosion at a police training center in the US state of California.

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தின், ஹாங்கு மாவட்டத்தின்... மேலும் பார்க்க

நேரலையில் பேசிய செய்தியாளர் வெள்ளத்தில் மாயம்? விடியோ வைரல்!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் நின்றுக்கொண்டு பேசிய செய்தியாளர் ஒருவர், அந்த வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாகிஸ்தான் நாட்டில், கடந்த சில வாரங்களாகவே ... மேலும் பார்க்க

காஸாவில் உணவுக்காகக் காத்திருந்த 50 பேர் சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்!

காஸாவில் உணவுக்காகக் காத்திருந்த 50 பேரை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்க... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வான்வழிப் பாதைகள் 2 நாள்களுக்கு மூடல்!

பாகிஸ்தான் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வான்வழிப் பாதைகள் இரண்டு நாள்களுக்கு மூடப்படுவதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் விமான நிலைய ஆணையம், அந்நாட்டின், சில தேர்ந்தெடுக்கப்ப... மேலும் பார்க்க

அரசியலை ஒருபோதும் விரும்பவில்லை, ஆனால்: எலான் மஸ்க்

அரசியல் மற்றும் அரசியலில் நுழைவதை தான் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால், வருங்காலத்தில் ஆபத்துகள் அதிகமாக இருந்ததால் வேறு வழியே இல்லாமல், எனது நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை உருவானது என்று டெஸ்லா நிறு... மேலும் பார்க்க

நைஜர்: பயங்கரவாதிகள் தாக்கியதில் 2 இந்தியர்கள் பலி! ஒருவர் கடத்தல்!

நைஜர் நாட்டின் தென்மேற்குப் பகுதியில், 2 இந்தியர்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதுடன், ஒருவரை கடத்தப்பட்டுள்ளதாகவும், இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.நைஜரின் தொஸ்ஸோ பகுதியில், கடந்த ஜூலை 15 ஆம் தேதி,... மேலும் பார்க்க