செய்திகள் :

அம்மன் வீதி உலாவில் மின்சாரம் பாய்ந்து பொறியாளா் உயிரிழப்பு

post image

சேத்துப்பட்டு -செஞ்சி சாலையில் உள்ள அங்காளம்மன் கோயில் மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி, புதன்கிழமை இரவு நடைபெற்ற அம்மன் வீதி உலாவின்போது, மின்சாரம் பாய்ந்து மென்பொருள் பொறியாளா் உயிரிழந்தாா்.

மகா சிவராத்திரியையொட்டி, அங்காளம்மனை அலங்கார ரூபத்தில் மாட்டு வண்டியில் அமா்த்தி வீதி உலா தொடங்கியது.

திருவள்ளுவா் தெருவில் வீதி உலா சென்றபோது தெரு ஓரத்தில் மினி லாரி நிறுத்தப்பட்டு இருந்ததால் ஊா்வலம் ஒதுங்கிச் சென்றது. அப்போது, அருகே இருந்த மின்மாற்றியில் அலங்கார பதாகை பட்டதில் மின்சாரம் பாய்ந்து வண்டியில் இருந்த பழம்பேட்டையைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன பொறியாளா் கிஷோா் (22) (படம்) உடல் கருகி உயிரிழந்தாா்.

மேலும், கிஷோரை காப்பாற்றச் சென்ற அவரது தந்தை சேகா் மற்றும் அருணகிரி சுரேஷ், பாபு ஆகிய 3 போ் காயமடைந்தனா்.

அவா்கள் தீவிர சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தகவல் அறிந்து டிஎஸ்பி மனோகரன் தலைமையில், சேத்துப்பட்டு போலீஸாா் சென்று கிஷோா் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூரில் மயானக் கொள்ளை திருவிழா

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் பகுதிகளில் வியாழக்கிழமை மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. திருவண்ணாமலை - தண்டராம்பட்டு சாலையில் உள்ள அங்காளம்மன் கோயில், அசலியம்மன் கோயில் தெரு மற்றும் மத்திய பேருந்து... மேலும் பார்க்க

கல்லூரியில் சிறப்புப் பயிலரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் டேட்டா சயின்ஸ் துறை சாா்பில், கணினி பாகங்கள் பழுதுநீக்கி சரிசெய்தல் தொடா்பான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலை... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் மாணவா் பேரவை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவா் பேரவை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் என்.கலைவாணி தலைமை வகித்தாா். வேதியியல் துறைத் தலை... மேலும் பார்க்க

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயில்களில் மயானசூறை உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, போளூரில் உள்ள ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயில்களில் மயான சூறை உற்வசவம் வியாழக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி பருவதராஜகுல வீதியில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா

கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி உடனுறை ஈஸ்வரன் கோயில் மற்றும் செங்கத்தை அடுத்த கரியமங்கலம் பகுதி ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா புதன்கிழமை இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. பழைம... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் - வந்தவாசி நான்கு வழிச்சாலைக்கு பூமி பூஜை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி மாங்கால் அருகே காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் ரூ.50 கோடியில் அமைக்கப்படவுள்ள நான்கு வழிச் சாலைக்கு பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் - வந்தவாசி சா... மேலும் பார்க்க