செய்திகள் :

`அரசு, நீதிமன்ற ஆவணங்களை மொழிப்பெயர்க்க AI பயன்படுத்துவது ஆபத்து' - கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

post image

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எல்லாத் துறைகளிலும் ஊடுருக் கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் அதைப் பயன்படுத்தெல்லாம் என்ற பயிற்சிப் பட்டறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கின்றன.

அதேசமயம் இந்த 'AI' தொழில்நுட்பத்தில் இருக்கும் பெரிய சிக்கலே தகவல் பாதுகாப்புதான். எல்லா நாடுகளிலும், எல்லாருடையெ ஸ்மார்ட் போன்களின் வழியே ஊடுருவி இந்த 'AI'க்கள் தனிப்பட்ட தகவல்களை விழுங்கி வருகின்றன. இந்தத் தனிப்பட்ட தகவல்களை வைத்தே இவை செயல்படவும் ஆரம்பித்துவிட்டன.

நம்முடைய தகவல்கள் நமக்குத் தெரியுமோ, இல்லையோ நம்முடைய போனில் இருக்கும் 'AI' தொழில்நுட்பத்திற்கு நன்றாகத் தெரியும். இதனால் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. அதேபோல நாட்டின் தகவல் பாதுகாப்பும் கொஞ்சம் கொஞ்சமாக கேள்விக்குறியாகிக் கொண்டே செல்கின்றன.

AI Tech

அரசு அலுவலகங்களில் ஆவணங்களை மொழிப்பெயர்த்தல் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன. நீதிமன்ற ஆவணங்களை, அதன் உத்தரவுகளை மொழிப்பெயர்க்கவும் பயன்படுத்தி வருகின்றன.

இதனால் அரசு மற்றும் நீதிமன்றத்தின் முக்கிய ஆவணங்கள் குறித்த தகவல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. இதைக் கட்டுப்படுத்த சில வழிகாட்டுதல்களைக் கொண்டு வருகிறது அரசும், நீதிமன்றமும்.

AI

அவ்வகையில் முதற்கட்டமாக கேரளா ஐகோர்ட், "நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்துத் தர 'ChatGPT' போன்ற 'AI' செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது. நீதிமன்றம் அங்கீகாரம் பெற்ற AI செயலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்." என்று Al பயன்பாடு தொடர்பாக நீதிமன்ற அலுவலர்களுக்கு கேரளா ஐகோர்ட் வழிகாட்டுதல்கள் வெளியிட்டிருக்கிறது. இதை மீறி AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது கேரளா ஐகோர்ட்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``அமலாக்கத்துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல'' - உயர் நீதிமன்றம் காட்டம்.. காரணம் என்ன?

கடந்த 2006 ஆம் ஆண்டு நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த ஆர்.கே.எம். பவர்ஜென் நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.அதேபோல அமலாக்க... மேலும் பார்க்க

PMK: ``வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு; படை திரள்வோம்'' - பாமக அன்புமணி ராமதாஸ்

கடந்த அதிமுக ஆட்சியில் 2019-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார் அப்போதைய ... மேலும் பார்க்க

"ரப்பர் தொழிலார்களின் குறைகளை யாருமே கேட்கவில்லை; ஆனா..." - புதிய அதிகாரிக்கு தொழிற்சங்கம் பாராட்டு

தமிழ்நாடு அரசின் ரப்பர் கழகத்தால் நிர்வகிக்கப்படும் ரப்பர் தோட்டங்கள் பெரும்பாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளன. கீரிப்பாறை, மணலோடை, பரளியாறு, காளிகேசம், சிற்றார், மருதம்பாறை, குற்றியார், கோத... மேலும் பார்க்க

சஸ்பென்ஸ் வைக்கும் எடப்பாடி... TVK - ADMK இடையே என்ன நடக்கிறது?

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கிறதா.. த.வெ.க-வை கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க-வை வெளியேற்றுவீர்களா.. போன்ற கேள்விகளுக்கு உரிய பதிலைச் சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் அ.தி... மேலும் பார்க்க

`இந்த நாலு பேரையும் நிக்க வச்சு கேள்வி கேக்கணும்' - உயரதிகாரிகள் மீது சரமாரியாக குற்றம்சாட்டும் DSP

மயிலாடுதுறை மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி-யாக இருப்பவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் வாகனமான ஜீப்பை அமைச்சர் மெய்யநாதனுக்கு எஸ்கார்டு செல்ல வேண்டும் என வாங்கிக் கொண்டதால், ச... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: "நேர்மைக்குக் கிடைத்த பரிசு என் வாகனம் பறிப்பு" - மது விலக்கு டி.எஸ்.பி ஆதங்கம்

மயிலாடுதுறை மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி-யாக இருப்பவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் வாகனமான ஜீப்பை அமைச்சர் மெய்யநாதனுக்கு எஸ்கார்டு செல்ல வேண்டும் என வாங்கிக் கொண்டதால், ச... மேலும் பார்க்க