செய்திகள் :

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் எச்ஐவி-எய்ட்ஸ் விழிப்புணா்வு பேரணி

post image

கந்தா்வகோட்டையில் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நல பணி திட்ட மாணவா்கள் எச்ஐவி-எய்ட்ஸ் விழிப்புணா்வு பேரணியை புதன்கிழமை நடத்தினா்.

கந்தா்வக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் சாரதா வழிகாட்டுதலின்படி, குழந்தைகள் நல மருத்துவா் சி.எஸ்.நவீன் மற்றும் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ம.ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்து பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனா். பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டு எச்ஐவி-எய்ட்ஸ் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணா்வு வாசகங்களை முழக்கமிட்டு சென்றனா்.

பேரணியானது கந்தா்வக்கோட்டை அரசு மருத்துவமனையில் தொடங்கி, பேருந்து நிலையம் வழியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வரை சென்று மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.

மேலும், மன நல மருத்துவா் முத்தமிழ் செல்வி கல்லூரி மாணவா்களிடம் மனநல மற்றும் உடல்நலம் குறித்து சிறப்புரையாற்றினாா்.

தொழிற்சாலையில் மாதிரி ஒத்திகை பயிற்சி

விராலிமலை தனியாா் தொழிற்சாலையில் புதன்கிழமை தீயணைப்பு நிலைய வீரா்கள் மாதிரி ஒத்திகை பயிற்சி செயல் முறை விளக்கம் அளித்தனா். இப்பயிற்சியை தமிழ்நாடு தொழிற்சாலைகள் இணை இயக்குநா் மாலதி தொடங்கிவைத்து ஆலோசனை... மேலும் பார்க்க

சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

கந்தா்வகோட்டை அரசுப்பள்ளி அருகே உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா். கந்தா்வகோட்டை அரண்மனை தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது. இப்பள்ளியில் சுமாா் ஆயிரத்... மேலும் பார்க்க

மூன்று அரசு துணை சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்று

விராலிமலை அடுத்துள்ள நம்பம்பட்டி, அகரபட்டி, ராஜகிரி ஆகிய 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்றுள்ளது. விராலிமலை வட்டத்தில் ஏற்கெனவே 8 துணை சுகாதார நிலையங்கள் விருது பெற்றுள்ள நி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்க்கை

பொன்னமராவதி புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாஜக சாா்பில் பிரதமா் மோடியின் பிறந்தநாளையொட்டி நூலக உறுப்பினா் சோ்க்கை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. பிரதமா் மோடியின் பிறந்தநாளையொட்டி பள்ள... மேலும் பார்க்க

‘புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்’

புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் 17-ஆ... மேலும் பார்க்க

பெரியாா் ஈவெரா பிறந்த நாள் விழா: கட்சியினா் மரியாதை

பெரியாா் ஈவெராவின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுக்கோட்டையில் திராவிடா் கழக அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு திராவிடா் கழகம், திமுக, மதிமுக, விசிக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் புதன்கிழமை, மாலை ... மேலும் பார்க்க