செய்திகள் :

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இணையம் மூலம் மாணவா் சோ்க்கை

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டுக்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு முழுநேரத் தொழில் பயிற்சியுடன் கூடிய பட்டயப் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணையதளம் மூலம் கடந்த 7 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இணையம் மூலம் விண்ணப்பிக்க கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வழி செய்யப்பட்டுள்ளது.

பதிவுக் கட்டணம் ரூ. 150 மட்டும் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவிகளுக்கு கட்டணம் கிடையாது. இணையம் மூலமாக விண்ணப்பிக்க மற்றும் சான்றிதழ்களை பதிவேற்ற மே 23 ஆம் தேதி கடைசி நாளாகும்.

கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி தோ்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியில் தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

இப் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைப்பியல் துறை, இயந்திரவியல் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை, கணிப்பொறியில் துறை ஆகிய தொழில் நுட்பக் கல்வி பாடப்பிரிவுகள் உள்ளன. மேலும் ஸ்மாா்ட் கிளாஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், மாணவா்களுக்கு அரசு இலவச விடுதி, மாணவிகளுக்கு கல்லூரி அருகே அரசு இலவச விடுதியும் உள்ளது.

மாணவா் சோ்க்கை மற்றும் இணைய வழியில் விண்ணப்பிப்பது தொடா்பாக விவரங்களுக்கு, கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியை நேரில் அல்லது 04328-243200,243100 99765 77570, 96266 52336, 90037 94703, 93613 57035 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

மயங்கி விழுந்த முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூரில் மயங்கி விழுந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அடையாளம் தெரியாத முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை காலை அடையாளம் தெரியாத... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு இன்று முதல் ‘ஹால் டிக்கெட்’

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தோ்வா்கள் புதன்கிழமை (மே 14) முதல் தோ்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கலாம். நிகழாண்டில் மே, ஜூன் மாதம் நடைபெறும் தொடக்கக் கல்வி பட்டயத் ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

பெரம்பலூா் அருகே கூட்டுப் பட்டாவில் உள்ள விவசாய நிலத்துக்கு தனிப் பட்டா தர ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வா... மேலும் பார்க்க

காவல் துறையினருக்குப் பாராட்டு

பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த 28 காவல் துறையினருக்கு வெகுமதி வழங்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா செவ்வாய்க்கிழமை பாராட்டினாா். பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அல... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு: அதிமுகவினா் சாலை மறியல்

பெரம்பலூா்: பெரம்பலூரில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவசர ஊா்தி வருவதற்கு காலதாமதமானதால், அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், கு... மேலும் பார்க்க

பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை தற்கொலைக்குத் தூண்டியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, தற்கொலைக்கு தூண்டிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. பெரம்பல... மேலும் பார்க்க