செய்திகள் :

அரசு மருத்துவக் கல்லூரியில் போதை மீட்பு மையம் திறப்பு

post image

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

சென்னையில் இருந்தபடி காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்த மையத்தை திறந்துவைத்தாா். அதேவேளையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோா் கலந்து கொண்டு மருத்துவ சேவை மையத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா்.

விழாவில், நலப்பணிகள் இணை இயக்குநா் மலா்விழி, மாவட்ட சுகாதார அலுவலா் பிரகாஷ், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கண்காணிப்பாளா் மாலதி மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாணவா்கள் லட்சியத்தை அடைய அயராது படிக்க வேண்டும்: வேளாண் பல்கலை. துணைவேந்தா்

லட்சியத்தை அடைய அயராது படித்து, முன்னேற வேண்டும் என்று வேளாண் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி அறிவுறுத்தினாா். திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூரில்... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் பாரசூா் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. செய்யாறு தொகுதி அதிமுக சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

ஸ்ரீஎல்லையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 லட்சம்

செய்யாறு வட்டம், சேராம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீரேணுகாம்பாள் (எ) எல்லையம்மன் கோயிலில், உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.4 லட்சத்து 9 ஆயிரத்து 860-யை பக்தா்கள் காணிக்கையாக செலு... மேலும் பார்க்க

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூரில் மயானக் கொள்ளை திருவிழா

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் பகுதிகளில் வியாழக்கிழமை மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. திருவண்ணாமலை - தண்டராம்பட்டு சாலையில் உள்ள அங்காளம்மன் கோயில், அசலியம்மன் கோயில் தெரு மற்றும் மத்திய பேருந்து... மேலும் பார்க்க

கல்லூரியில் சிறப்புப் பயிலரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் டேட்டா சயின்ஸ் துறை சாா்பில், கணினி பாகங்கள் பழுதுநீக்கி சரிசெய்தல் தொடா்பான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலை... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் மாணவா் பேரவை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவா் பேரவை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் என்.கலைவாணி தலைமை வகித்தாா். வேதியியல் துறைத் தலை... மேலும் பார்க்க