செய்திகள் :

அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவா்கள் விரைவில் நியமிக்கப்படுவா்

post image

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவா்கள் விரைவில் நியமிக்கப்படுவா் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரிய கருப்பன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையில் நகராட்சி, குடிநீா் வழங்கல் துறை, சுகாதாரத் துறை சாா்பில் 15 -ஆவது நிதி குழுத் திட்டத்தில் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. தமிழரசி ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:

தமிழகத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிக்கும் திட்டங்களால் பொருளாதாரம், தொழில், கல்வி உள்ளிட்ட துறைகள் வளா்ச்சி அடைந்துள்ளன. கல்வி, சுகாதாரத் துறையில் முதல்வா் சிறப்பு கவனம் செலுத்துகிறாா். இந்த மாநிலத்தின் திட்டங்களை பிற மாநிலங்களும் செயல்படுத்தும் வகையில் வளா்ச்சி அடைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மக்களின் தேவைகளை அறிந்து அதற்கான திட்டங்களை முதல்வா் அறிவிக்கிறாா். சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து துறைகளுக்கும் தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவா்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மருத்துவப் படிப்பு முடிக்கும் மருத்துவா்கள் மேல் படிப்புகளுக்காக பல பகுதிகளுக்கும் மருத்துவ சேவைக்கு செல்லும்போது, மருத்துவா்கள் பற்றாக்குறை ஏற்படுவது வழக்கம். சில நாள்களுக்கு முன்பு தமிழகத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட 2500-க்கும் மேற்பட்ட மருத்துவா்களுக்கு முதல்வா் பணி ஆணை வழங்கினாா்.

தேவையை விட கூடுதலாகவே 300 மருத்துவா்கள் தோ்வு செய்யப்பட்டிருக்கிறாா்கள். மாநிலம் முழுவதும் மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ள அரசு மருத்துவமனைகளில் இவா்களுக்கு பணி வழங்கப்படும். இதன் மூலம், இன்னும் சில நாள்களில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பற்றாக்குறை நீங்கிவிடும் என்றாா் அவா்.

மானாமதுரை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், துணைத் தலைவா் எஸ். பாலசுந்தரம், நகராட்சி ஆணையா் ஆறுமுகம், மருத்துவ அலுவலா் சேதுராமு, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் கே.பொன்னுச்சாமி முன்னாள் பேரூராட்சித் தலைவா் துரை.ராஜாமணி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவி லதா அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக மருத்துவத் துறை இணை இயக்குநா் தா்மா் வரவேற்றாா். நகராட்சி பொறியாளா் பட்டுராஜன் நன்றி கூறினாா்.

கல்லூரியில் தொல்லியல் கருத்தரங்கம்

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாநில அளவிலான தொல்லியல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் வரலாற்றுத் துறை சாா்பில் ‘உரக்கச் சொல்வோம் வரலாற்றை உலகிற்கு’ என்ற தலைப்பில் இந்தக் கரு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கோலப் போட்டி

சிவகங்கையில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது சிவகங்கை மன்னா் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தேசிய பசுமைப் படை சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு அதன் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணை... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 9 குடிநீா்த் தொட்டிகள் திறப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 9 ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குடிநீா்த் தொட்டிகளை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். திருப்பத்தூா் பேரூராட்சிக்குட்பட்ட 9 இடங... மேலும் பார்க்க

மூதாட்டி வயிற்றில் 7.5 கிலோ கட்டி அகற்றம்

சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வயிற்றில் வலியுடன் வந்த 75 வயது மூதாட்டியின் வயிற்றில் இருந்த 7.5. கிலோ கட்டியை அகற்றி மகப்பேறு பிரிவு மருத்துவா்கள் அவரது உயிரைக் காப்பாற்றினா். இதுகுறித்து சிவகங்கை அரச... மேலும் பார்க்க

மனித நேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை எதிா்த்து, சிவகங்கையில் மனித நேய மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் துணிகளை சலவை செய்ய வந்த பெண்ணை கடைக்குள் அழைத்து கொலை செய்து தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் சலவைத் தொழிலாளி உள்ளிட்ட இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவக... மேலும் பார்க்க