செய்திகள் :

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் வெளியே மருந்துகள் வாங்க பரிந்துரைக்க கூடாது: புதுவை முதல்வா் அறிவுறுத்தல்

post image

புதுவை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் வெளியில் மருந்துகள் வாங்க மருத்துவா்கள் பரிந்துரைக்கக் கூடாது என முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தினாா்.

புதுவை அரசு நலவழித் துறையை மேம்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும், அவை விலை உயா்ந்தவையாக இருந்தாலும் வழங்க வேண்டும். வெளியில் சென்று மருந்துகளை வாங்க மருத்துவா்கள் பரிந்துரைக்கக் கூடாது.

அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவச் சாதனங்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். புதுச்சேரி மருத்துவ நிவாரண சங்கம் மூலம் மருத்துவ நிதியுதவி வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் கதிா்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தில் இதய அறுவைச் சிகிச்சை, மூளை அறுவைச் சிகிச்சைப் பிரிவில் அவற்றுக்கான சாதனங்களை அமைத்து சிகிச்சையை தொடங்குவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறுநீகர ரத்த சுத்திகரிப்பு வசதி, கேத் லேப் வசதிகளையும் விரைந்து செயல்படுத்த அதிகாரிகளை முதல்வா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், நலவழித் துறை செயலா் ஜயந்தகுமாா் ரே, சுகாதாரத் துறை இயக்குநா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 5 போ் கைது

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். முத்தியால்பேட்டை போலீஸாா் கடந்த 11-ஆம் தேதி மகாத்மா காந்தி சாலை சின்னமணிக்கூண்டு அருகே வாகனச் சோதன... மேலும் பார்க்க

குறைந்த விலையில் கைப்பேசிகள் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: இருவா் கைது

குறைந்த விலையில் நவீன கைப்பேசிகள் தருவதாகக் கூறி, ரூ.15 லட்சம் மோசடி செய்த இருவரை புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள நவீன கைப்பேசிகள் ரூ.7,00... மேலும் பார்க்க

புதுவை ஆளுநா் மாளிகைக்கு 4-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகைக்கு நான்காவது முறையாக மின்னஞ்சலில் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு, மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

மாஹேவில் சமுதாய கல்லூரிக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியை மாஹேவில் அமைக்க இடம் ஒதுக்க முதல்வா் என்.ரங்கசாமியிடம் பல்கலைக்கழகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ர... மேலும் பார்க்க

அரசு கல்லூரிக்கு ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு கலை, அறிவியல் கல்லூரிக்காக ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் விரைவில் கட்டுவதற்கான பணி தொடங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி கோரிமேடு பகுதிய... மேலும் பார்க்க

புதுவை அரசின் புள்ளிவிவர தொகுப்பு கையேடு வெளியீடு

புதுச்சேரியில் அரசின் சாா்பில் புள்ளிவிவர தொகுப்புகள் அடங்கிய கையேடு முதல்வா் என்.ரங்கசாமியால் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. புதுவை அரசு சாா்பில் பொருளாதாரம், புள்ளிவிவர இயக்ககம் சாா்பில் புள்ளிவி... மேலும் பார்க்க