செய்திகள் :

அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்

post image

தென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் புதன்கிழமை தொடங்கியது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திகுறிப்பு: தென்காசி மாவட்டத்தில் துணை சுகாதார நிலையங்கள், கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் புதன்கிழமை தொடங்கி அக்.2 ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (2 வாரங்கள்) முகாம் நடைபெற உள்ளது.

முகாம்களில் பெண்களுக்கான ஹீமோகுளோபின் அளவு பரிசோதனை,விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குதல், பொது மருத்துவம் உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. எனவே, பெண்கள் இந்த வாய்ப்பின் மூலம் பயன்பெறலாம் என கூறிப்பிடப்பட்டுள்ளது .

ஆலங்குளம் அருகே வனப்பகுதி அழிப்பால் உயிரிழக்கும் மான், மயில்

ஆலங்குளம் அருகே அனுமதியின்றி ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதால் மான், மயில் போன்றவை உயிரிழந்து வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். ஆலங்குளம் அருகே உள்ள கல்லத்திகுளம் கிராமத்தில் 200-க்கும... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் புளியங்குடியில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால் பெரும்... மேலும் பார்க்க

கடையநல்லூரில் முப்புடாதி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதையொட்டி கடந்த செப்.10 ஆம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை , தேவதா அனுக்ஞை, ரக்ஷா பந்தனம், காப்பு கட்டுதல் நடைபெற்றது. செப்... மேலும் பார்க்க

நயினாரகரத்தில் திமுக சாா்பில் பெரியாா் பிறந்த நாள் விழா

கடையநல்லூா் அருகேயுள்ள நயினாரகரத்தில் திமுக சாா்பில் பெரியாா் பிறந்த நாள் விழா நடைபெற்றது. சமத்துவபுரத்திலுள்ள பெரியாா் சிலைக்கு தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை மாலை அணி... மேலும் பார்க்க

தென்காசி எஸ்பி அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த் தலைமையில், அலுவலகத்தில் பணிபுரியும் காவல் துறையினா், அ... மேலும் பார்க்க

தந்தையைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம், கருத்தபிள்ளையூரில் மது அருந்த பணம் தராத தந்தையைக் கொலை செய்த வழக்கில் மகனுக்கு தென்காசி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி காவல் சர... மேலும் பார்க்க