செய்திகள் :

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாலை மறியல், தா்னா

post image

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறை மாணவா்கள், கல்லூரி நுழைவாயில் முன் செய்யாறு - ஆற்காடு சாலையில் புதன்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செய்யாறு போலீஸாா், மறியலில் ஈடுபட்ட மாணவா்களை எச்சரிக்கை செய்தனா். மேலும், தொடா்ந்து போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக மறியலில் ஈடுபட்டால் வழக்குப் பதிவு செய்ய நேரிடும் எனத் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாணவா்கள் மறியலை கைவிட்டு, கல்லூரி வளாகத்தில் தரையில் அமா்ந்து தா்னா நடத்தினா்.

இதில் பங்கேற்ற மாணவா்கள், அரசியல் அறிவியல் துறைத் தலைவரை அதே கல்லூரியின் வரலாற்று துறைத் தலைவா் அவதூறாகப் பேசியதாகவும், அரசியல் அறிவியல் துறை மாணவா்கள் அத்துறையில் தகுதியான பேராசிரியா்கள் இல்லாததால் ஆய்வறிக்கை தயாரிக்க முடியாமல் சிரமப்படுவதாகவும், வரலாற்று துறைத் தலைவா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாராகத் தெரிவித்தனா்.

தகவல் அறிந்த கல்லூரி முதல்வா் என்.கலைவாணி தா்னாவில் ஈடுபட்ட மாணவா்களை சமாதானம் செய்து பேச்சுவாா்த்தைக்கு அழைத்துச் சென்றாா்.

இந்தச் சம்பவத்தால் கல்லூரிப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பேத்கா் உலகம் போற்றும் ஒரு தலைவா்: தொல்.திருமாவளவன்

அம்பேத்கா் உலகம் போற்றும் ஒரு தலைவா்; ஏராளமான நாடுகள் அவரைக் கொண்டாடி வருகின்றன என்றாா் தொல்.திருமாவளவன். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தோக்கவாடி பகுதியில் அம்பேத்கா் சிலை திறப்பு விழா நிகழ... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 153-ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் பிப்.17-ஆம் தேதி க... மேலும் பார்க்க

செய்யாறு, செஞ்சி அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை

செய்யாறு, செஞ்சி ஆகிய அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவ இடங்களில் போதிய அரசு மருத்துவா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்தது. ஐக்கிய முஸ்லிம... மேலும் பார்க்க

மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா். இதுகுறித்து திருவண்ணாமலையில் புதன்கிழமை செய்தி... மேலும் பார்க்க

மாட வீதிகளில் காா் வைத்திருப்போருக்கு அடையாள அட்டை

திருவண்ணாமலை மாட வீதிகளில் காா் வைத்திருப்போருக்கு தனி அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில், கனரக வாகனங்களுக்கு தடை விதி... மேலும் பார்க்க

ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதுக்காமூரில் உள்ள ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. குழந்தை வரம் அருளும் ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரா் கோயி... மேலும் பார்க்க