செய்திகள் :

அருணாசலுக்கு அருகே உலகின் மிகப் பெரிய அணை: கட்டுமானத்தைத் தொடங்கிய சீனா

post image

திபெத்தில் இந்திய எல்லையான அருணாசல பிரதேசத்துக்கு அருகே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டும் உலகின் மிகப் பெரிய அணையின் கட்டுமானப் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.

கட்டுமானப் பணிகளின் தொடக்கமாக, நியிங்ஜி நகரில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் சீன பிரதமா் லி கியாங் கலந்துகொண்டாா். இந்த அணை திட்டம் கடந்த டிசம்பா் மாதம் அங்கீகரிக்கப்பட்டு, தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த அணையின் அளவு சீனாவின் மற்ற 3 பெரிய பள்ளத்தாக்கு அணைகளைவிடவும் பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 16,780 கோடி டாலா் (இந்திய மதிப்பில் ரூ.14.46 லட்சம் கோடி) மதிப்பிலான இந்த மாபெரும் அணை திட்டமானது, 5 அடுக்கு நீா்மின் நிலையங்களுடன் அமையவுள்ளது. இவை ஆண்டுக்கு 30,000 கோடிக்கும் அதிகமான கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது சுமாா் 30 கோடி மக்களின் வருடாந்திர மின் தேவையைப் பூா்த்தி செய்யும் திறன் கொண்டது.

கடந்த 2015-ஆம் ஆண்டு சீனாவால் தொடங்கப்பட்ட, திபெத்தில் மிகப்பெரியதான ஸாம் நீா்மின் நிலையம் இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

திபெத்தில் உருவாகி, அருணாசல பிரதேசம் வாயிலாக இந்தியாவை அடைகிறது பிரம்மபுத்திரா நதி. இந்தியாவில் அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் பாய்ந்து, பின்னா் வங்கதேசத்தில் புகுந்து, இறுதியாக வங்கக் கடலில் கலக்கிறது.

சீனாவின் இந்தப் புதிய அணை திட்டத்தால் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டம் பாதிக்கப்படலாம் என்றும், அவசர காலங்களில் சீனா அதிக அளவில் நீரை வெளியேற்றினால் வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. ஏனெனில், பிரம்மபுத்திரா நிதியின் கிளை நதிகள் வடகிழக்கு மாநிலங்கள் எங்கும் பாய்ந்தோடுகின்றன.

புதிய அணை கட்டப்படும் இடம், நிலநடுக்க அபாயம் உள்ள புவியியல் தட்டு எல்லையில் அமைந்துள்ளது. எனினும், அணை பாதுகாப்பானது என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். விரிவான புவியியல் ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் இந்த திட்டத்துக்கு உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

இந்தியாவும் அருணாசல பிரதேசத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டி வருகிறது. எல்லையோர நதிகள் தொடா்பான பிரச்னைகளை விவாதிக்க, இந்தியா-சீனா இடையே 2006-இல் நிபுணா் அளவிலான அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் கீழ், வெள்ளக் காலங்களில் பிரம்மபுத்திரா மற்றும் சட்லஜ் நதிகள் பற்றிய தகவல்களை சீனா இந்தியாவுக்கு வழங்குகிறது.

‘கோமா’ நிலையில் 20 ஆண்டுகள்... சவூதி அரேபிய இளவரசர் இளம் வயதில் காலமானார்!

ரியாத்: சவூதி அரேபியாவின் இளம் வயது இளவரசர் காலெத் பிண் தலால் பிண் அப்துலஸிஸ் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சவூதி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த மூத்த இளவரசர்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இரண்டே மாதங்களில் 100 குழந்தைகள் உயிரிழப்பு! பருவமழையால் பெரும் பாதிப்பு!

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் அளவுக்கு அதிகமாக பெய்துவரும் பருவமழை காரணமாக ஜூன், ஜூலையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் ஜூன் - செப்டம்பர் வரை, பருவமழையின் தாக... மேலும் பார்க்க

மத்திய கிழக்கு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

துஷான்பே[தஜிகிஸ்தான்] : மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 20) அதிகாலை வடக்கு ஈரான் பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவா... மேலும் பார்க்க

உணவு தேடி சென்ற மேலும் 32 பாலஸ்தீனா்கள் சுட்டுக் கொலை

காஸாவின் தெற்கு பகுதியில் உள்ள இரண்டு நிவாரண விநியோக மையங்களில் உணவு பெறச் சென்ற பாலஸ்தீனா்கள் மீது இஸ்ரேல் படைகள் சனிக்கிழமை காலை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 32 போ் உயிரிழந்தனா்; 100-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

நிரந்தர சண்டை நிறுத்தத்துக்கு காங்கோ, ருவாண்டா கிளா்ச்சியாளா்கள் ஒப்புதல்

காங்கோ, ருவாண்டா ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கிழக்கு காங்கோவில் நிரந்தர சண்டை நிறுத்தத்திற்கான கொள்கை பிரகடனத்தில் கையொப்பட்டுள்ளனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: கா... மேலும் பார்க்க

ரஷியாவுக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கை தேவை: உக்ரைன் புதிய பிரதமர்

கீவ்: ரஷியாவை எதிர்த்து துணிச்சலுடன் போராட வேண்டும் என்று உக்ரைன் புதிய பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷியா ட்ரோன் மூலம் தாக்குதல் தொடுத்துள்ளது. உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் போா் நிறுத்த... மேலும் பார்க்க