செய்திகள் :

அலுவலக நேரத்திற்கு பிறகு 'நோ' இ-மெயில், 'நோ' போன்கால்; மக்களவையில் மசோதா

post image

கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே தனிப்பட்ட மசோதா ஒன்றை‌ முன்மொழிந்துள்ளார்.

என்ன மசோதா?

சுப்ரியா சுலே முன்மொழிந்துள்ள மசோதாவின் முக்கிய அம்சம் இது தான் - வேலை நேரத்திற்குப் பிறகு வரும் அலுவலகம் சார்ந்த போன் கால், மெசேஜ், இ-மெயில் போன்றவற்றிற்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டியதில்லை.

இதை 'Right to Disconnect, 2025' என்று முன்மொழிந்துள்ளார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்.

சுப்ரியா சுலே
சுப்ரியா சுலே

அலுவலக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுக்குமான பேலன்ஸ் இந்த மசோதா மூலம் அடையலாம்‌ என்று சுப்ரியா சுலே கூறுகிறார்.

இந்த மசோதா சட்டமாக மாறும் போது, அலுவலகங்கள் இந்த விஷயத்தைக் கட்டாயப்படுத்தும் போது, இதை மீறினால் அபராதம் விதிக்கப்படலாம்... தண்டனையும் வழங்கப்படலாம்.

இது தேவையா?

இன்றைய டிஜிட்டல் காலத்தில் இந்த மசோதா மிக முக்கியமான‌ ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான நிறுவனங்களில் அலுவலக நேரம் தாண்டியும் வேலைசெய்ய வேண்டியதாக இருக்கிறது. வீட்டிற்கு சென்றும் அலுவலக வேலைகளைத் தொடர வேண்டியதாக உள்ளது.

ஏற்கெனவே, பணிச்சுமை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு இது வொர்க் லைஃப் - பெர்சனல் லைஃப் பாதிப்பைத் தருகிறது.

இவற்றை இந்த மசோதா சட்டமானால் தடுக்கலாம்.

இந்த மசோதா குறித்தும், இது சட்டமாவது குறித்தும் நீங்கள்‌ என்ன நினைக்கிறீர்கள் மக்களே?

``அந்த பாச்சா எதுவும் பலிக்காது; இதுதான் எங்கள் அரசியல்'' - மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இன்று மதுரையில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,"சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்; வீரமிக்க பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த மண்; முக்கியமாக, ஆராய்ந்திடாமல் அவசர அவசரமாக தவற... மேலும் பார்க்க

முதலீட்டாளர்கள் மாநாடு: ``இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டது'' - ஸ்டாலின்

இன்று மதுரையில் பயணம் மேற்கொண்டிருக்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின்.இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக, 'TN ரைஸிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில்' கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் ரூ.36,660.35 கோடி முத... மேலும் பார்க்க

``முதல்வர் பதவியை வாங்க எங்களிடம் ரூ.500 கோடி இல்லை'' - கிரிக்கெட் வீரர் சித்து மனைவி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து சமீப காலமாக காங்கிரஸ் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். மக்களவை தேர்தலிலும் கூட பிரசாரம் செய... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலி மருந்து வழக்கு' சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவு; கலக்கத்தில் ரௌடிகள்

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான `சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி-க்கு புகார் அளித்தது. அதன்படியில் புதுச்சேரி மேட்டு... மேலும் பார்க்க

சேலம்: ``தறி ஓட்டுனா பொண்ணு தரவே யோசிக்கிறாங்க'' - நிலைமையை சொல்லும் கைத்தறி நெசவாளர்கள்

சோறு எப்படி வருது என்று கேட்டால், இப்போதைய பிள்ளைகள் "வயலில் இருந்து வருது" என்று சொல்வது போல, நாம் உடுத்துகிற ஆடை எப்படி உருவாகிறது என்று கேட்டால், பலருக்கும் தெரியாது. நூல்களையெல்லாம் ஒருங்கிணைத்து ... மேலும் பார்க்க