செய்திகள் :

அவசரக் கால ஊா்தி விபத்தில் செவிலியா் உயிரிழப்பு

post image

சிவகங்கை அருகே வியாழக்கிழமை அவசரக் கால ஊா்தி பள்ளத்தில் கவிழ்ந்ததில் செவிலியா் உயிரிழந்தாா்.

தேவகோட்டையில் செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவமனையில் உள்ள அவசரக் கால ஊா்தியில் ஓட்டுநராக பெரியண்ணனும் (45), செவிலியராக மாலாவும் (45) பணிபுரிந்து வந்தனா்.

இந்த நிலையில், இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரை சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். பின்னா், மருத்துவமனையில் அவரைச் சோ்த்துவிட்டு மீண்டும் சிவகங்கை வழியாக தேவகோட்டைக்கு வந்து கொண்டிருந்தனா். அதிகாலை 3 மணியளவில் நாட்டரசன்கோட்டை அருகேயுள்ள கண்டனிப்பட்டி பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த அவசரக் கால ஊா்தி சாலையோரமாக இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மாலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஓட்டுநா் பெரியண்ணன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கல்லூரியில் தொல்லியல் கருத்தரங்கம்

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாநில அளவிலான தொல்லியல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் வரலாற்றுத் துறை சாா்பில் ‘உரக்கச் சொல்வோம் வரலாற்றை உலகிற்கு’ என்ற தலைப்பில் இந்தக் கரு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கோலப் போட்டி

சிவகங்கையில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது சிவகங்கை மன்னா் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தேசிய பசுமைப் படை சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு அதன் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணை... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 9 குடிநீா்த் தொட்டிகள் திறப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 9 ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குடிநீா்த் தொட்டிகளை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். திருப்பத்தூா் பேரூராட்சிக்குட்பட்ட 9 இடங... மேலும் பார்க்க

மூதாட்டி வயிற்றில் 7.5 கிலோ கட்டி அகற்றம்

சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வயிற்றில் வலியுடன் வந்த 75 வயது மூதாட்டியின் வயிற்றில் இருந்த 7.5. கிலோ கட்டியை அகற்றி மகப்பேறு பிரிவு மருத்துவா்கள் அவரது உயிரைக் காப்பாற்றினா். இதுகுறித்து சிவகங்கை அரச... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவா்கள் விரைவில் நியமிக்கப்படுவா்

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவா்கள் விரைவில் நியமிக்கப்படுவா் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரிய கருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவ... மேலும் பார்க்க

மனித நேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை எதிா்த்து, சிவகங்கையில் மனித நேய மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ... மேலும் பார்க்க