செய்திகள் :

``அவரோடு வாழ முடியாது, காரணத்தை சொல்லமுடியாது'' திருமணமாகி 20 நிமிடத்தில் கணவனை பிரிந்த பெண்

post image

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொன்னாலும், அந்தத் திருமண வாழ்க்கை சிலருக்கு நரக வாழ்க்கையாக அமைந்துவிடுகிறது. இதனால், திருமணமான சில மாதங்கள் அல்லது சில நாட்களிலேயே கூட விவாகரத்து செய்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண் திருமணமான ஒரே நாளில் தனது கணவனை விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள தியோரியா என்ற இடத்திற்கு அருகிலுள்ள பாலூனி என்ற பகுதியில் மளிகை கடை வைத்திருப்பவர் விஷால். அவருக்கு பூஜா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட தேதியில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் திருமண சடங்குகள் நடைபெற்றன. காலையில் தொடங்கி மாலை வரை திருமண சடங்குகள் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு பூஜா தனது கணவன் வீட்டிற்கு சென்றார்.

திருமணம்
திருமணம்

பூஜா, கணவன் வீட்டினரின் அனுமதியுடன் தனது அறைக்குள் சென்றார். அடுத்த 20 நிமிடங்களில் அந்த அறையிலிருந்து வெளியே வந்த பூஜா, "எனக்கு விஷாலுடன் வாழ முடியாது. நான் எனது பெற்றோர் வீட்டிற்கு செல்கிறேன். எனது பெற்றோருக்கு போன் செய்யுங்கள்," என்று கூறினார்.

இதைக் கேட்டவர்களில் ஆரம்பத்தில் பூஜா நகைச்சுவையாகச் சொல்கிறார் என நினைத்தனர். ஆனால் பூஜா தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள், வீட்டினர்கள் அந்தப் பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பூஜா விஷாலுடன் வாழ முடியாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து பூஜாவின் பெற்றோருக்கு போன் செய்து வரவழைத்தனர்.

அவர்களும் பூஜாவுடன் பேசிப் பார்த்தனர். ஆனால் பூஜா தனது முடிவில் உறுதியாகவே இருந்தார். “என்ன காரணத்திற்காக விஷாலுடன் வாழ மறுக்கிறாய்?” என்று உறவினர்கள் கேட்டனர். ஆனால் பூஜா அதற்கான காரணத்தை மட்டும் கடைசி வரை சொல்லவே இல்லை. “விஷாலுடன் வாழ மாட்டேன்” என்று மட்டும் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

பிரிவு
பிரிவு

இந்த பிரச்சனை ஊர் பஞ்சாயத்துக்கு சென்றது. பஞ்சாயத்து தலைவர்கள் கூடி இது குறித்து விவாதித்தனர். அவர்களும் பூஜாவிடம் “என்ன காரணத்திற்காக திருமண வாழ்க்கை வேண்டாம் என்று சொல்கிறாய்?” என்று கேட்டார்கள்.

அவர்களிடமும் பூஜா காரணத்தை சொல்லவில்லை. அதே சமயம், “விஷாலுடன் வாழ மாட்டேன்” என்று மட்டும் உறுதியாகச் சொன்னார்.

5 மணி நேரம் நடந்த பஞ்சாயத்திலும் எந்த வித தீர்வும் எட்டப்படாததால், வேறு வழியில்லாமல் இருவரையும் பஞ்சாயத்தார் பிரித்துவிட்டனர்.

இருவரும் மனஒத்துப் பிரிவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதோடு, இரு குடும்பமும் திருமணத்திற்கு கொடுத்த பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை திரும்ப வழங்கும்படி பஞ்சாயத்தார் கேட்டுக்கொண்டனர். மேலும், இருவரும் இனி வேறு யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பஞ்சாயத்தார் தெரிவித்தனர்.

பூஜா முதல் நாள் மாலை கணவன் வீட்டிற்கு சென்றார். மறுநாள் பஞ்சாயத்து தீர்ப்பிற்குப் பிறகு தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பினார். ஆனால் கடைசி வரை விஷால் வேண்டாம் என்று சொல்வதற்கான காரணத்தை மட்டும் சொல்லவில்லை.

பிரிவு
பிரிவு

இது குறித்து மணமகன் விஷால் கூறுகையில், “திருமணத்திற்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்வதில் எந்த விருப்பமும் காட்டவில்லை என சொல்ல முடியாது; சாதாரணமாகவே பேசினார். அவரது இந்த முடிவு இரு குடும்பங்களுக்கும் தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது. பூஜா மீது போலீசில் புகார் எதுவும் கொடுக்கப் போவதில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

இச்செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதை படித்த பலரும், ‘சேர்ந்து வாழ்ந்து வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தை அனுபவிப்பதை விட பிரிந்து விடுவது மேல்’ என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Ditwah: சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் மழைநீர்! | Rainy Day Roundup Photo Album

டிட்வா: "அவர்கள் மீண்டெழுந்திட துணை நிற்போம்" - இலங்கை பாதிப்பு குறித்து ஸ்டாலின் மேலும் பார்க்க

எலக்ட்ரோ ஹோமியோபதி: ``ரூ.30000 கொடுத்தால் டாக்டர் பட்டம்'' - ம.பி சட்டமன்றத்தில் சர்ச்சை

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அடல் பிகாரி வாஜ்பாய் இந்தி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. மாநில அரசுக்கு சொந்தமான இந்த பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரோ ஹோமியோபதி என்ற ஒரு மருத்துவ படிப்பு வழங்கப்பட்டு வர... மேலும் பார்க்க

Sanchar Saathi: சைபர் செக்யூரிட்டி செயலியுடன் ஸ்மார்ட்போன் தயாரிக்க மத்திய அரசு உத்தரவு

நாட்டில் டிஜிட்டல் கைது மற்றும் இணைய குற்றங்கள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது போன்ற மோசடியில் பெரும்பாலும் பெண்கள், முதியோர்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இக்குற்... மேலும் பார்க்க

`வாட்ஸ்அப், டெலிகிராம், அரட்டை பயன்பாட்டுக்கு சிம் கார்டு கட்டாயம்' - புதிய விதிகள் என்ன சொல்கிறது?

வாட்ஸ்அப், டெலிகிராம், அரட்டை மொபைல் போன்ற செயலிகளை ஒரு முறை சிம் கார்டை கொண்டு பதிவிறக்கம் செய்து கொண்ட பிறகு அந்த சிம் கார்டை எடுத்துவிட்டாலும், வேறு சிம் கார்டு அல்லது இன்டர்நெட் மூலம் வாட்ஸ்அப்பை ... மேலும் பார்க்க

``எங்கள் காதல் சாகவில்லை'' - இறந்த காதலனை திருமணம் செய்வதாக அறிவித்த பெண்

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் அருகில் உள்ள ஜுனா கஞ்ச் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அச்சல் (20). இந்தப் பெண்ணின் வீட்டிற்கு அவரது சகோதரனின் நண்பன் சக்‌ஷாம் அடிக்கடி வந்து செல்வதுண்டு. இவ்வாறு வந்து சென்றபோத... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியா: 62 வயதில் காதலியை மணந்த அந்தோணி; பதவிக்காலத்தில் திருமணம் செய்த முதல் பிரதமராகிறார்!

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ், தனது நீண்ட நாள் காதலியான ஹெய்டனை நவம்பர் 29, 2025 அன்று கரம்பிடித்தார்.62 வயதில் திருமணம் செய்துகொண்ட அல்பானீஸ், ஆஸ்திரேலிய வரலாற்றில் பதவியில் இருக்கும் காலத்த... மேலும் பார்க்க