செய்திகள் :

"அவர் சொல்லவில்லை என்றால் 10,000 ரன்கள் அடித்திருக்க மாட்டேன்" - சுவாரசியம் பகிரும் கவாஸ்கர்

post image

சுனில் கவாஸ்கர்... இந்தப் பெயரைக் கேட்டதும் இக்கால இளைஞர்களுக்கு இவரை வெறும் கிரிக்கெட் வர்ணனையாளராகத்தான் தெரியும். ஆனால், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் வெஸ்ட் இன்டீஸ் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த ஒரு காலத்தில், மற்ற அணிகளெல்லாம் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை எதிர்கொள்ளத் திணறிக்கொண்டிருந்த சமயத்தில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஆளாக 10,000 ரன்களை அடித்தவர்தான் சுனில் கவாஸ்கர். இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கபில்தேவ் தலைமையிலான அணியில் சீனியர் வீரராகவும் கவாஸ்கர் இருந்தார்.

சுனில் கவாஸ்கர்
சுனில் கவாஸ்கர்

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஆளாக 10,000 ரன்களைக் கடப்பதற்கு முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்தான் காரணமென்று கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார். ஸ்போர்ட்ஸ் ஊடக நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசியிருக்கும் கவாஸ்கர், ``டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் 10,000 ரன்களை எட்டுவதற்கான வாய்ப்பைப் பெற்றதற்கு ஒரே காரணம் இம்ரான் கான். டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு முன்பு (1986), இங்கிலாந்தில் அந்நாட்டுக்கெதிரான தொடரில் முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு நானும் இம்ரானும் ஒரு நண்பருடன் லண்டனிலுள்ள ஒரு இத்தாலிய உணவகத்துக்கு மதிய உணவு சாப்பிடச் சென்றோம்.

அப்போது, `இதுதான் என்னுடைய கடைசி தொடர். இந்தத் தொடருக்குப் பிறகு ஓய்வுபெறுவேன்' என்று இம்ரானிடம் கூறினேன். அப்போது, `உங்களால் அது முடியாது' என்று அவர் கூற, `என்னால் முடியாது என்று நீங்கள் எதைக் குறிக்கிறீர்கள். அது என்னுடைய விருப்பம்' என்றேன். அதற்கு, `இல்லை இல்லை, பாகிஸ்தான் அணி இந்தியா வருகிறது. நீங்கள் விளையாடும் இந்திய அணியை நான் வீழ்த்த விரும்புகிறேன். நீங்கள் இல்லாத இந்திய அணியை நான் வெல்ல விரும்பவில்லை' என்று இம்ரான் கூறினார்.

சுனில் கவாஸ்கர்
சுனில் கவாஸ்கர்

`ஆனால், பாகிஸ்தான் வரவில்லையே' என்று நான் கேட்க, `ஐசிசி மீட்டிங் நடக்கிறது. அடுத்த வாரம் நீங்கள் அறிவிப்பைப் பெறுவீர்கள்' என்று இம்ரான் சொன்னார். நானும், `அறிவிப்பு வந்தால் தொடர்ந்து விளையாடுவேன். இல்லையென்றால் அடுத்த டெஸ்ட் போட்டியோடு ஓய்வுபெறுவேன்' என்றேன்.

அவர் கூறியது போலவே அறிவிப்பும் வந்தது. நானும் தொடர்ந்து விளையாடினேன். நான் மட்டும் அப்போதே ஓய்வுபெற்றிருந்தால், 9,200 முதல் 9,300 ரன்களில் கரியரை முடித்திருப்பேன். பாகிஸ்தான் இந்தியா வந்ததாலும், அதற்கிடையில் இந்தியாவில் இரண்டு தொடர்கள் நடந்ததாலும் நான் 10,000 ரன்களைத் தொட்டேன்." என்று கூறினேன்.

இம்ரான் கான்,

1987-ல் பாகிஸ்தான், இந்தியா வந்து விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவில் ஓய்வுபெற்ற கவாஸ்கர், அந்தத் தொடரின் நான்காவது போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைத் தொட்டார். கடைசி போட்டியோடு, 10,122 டெஸ்ட் ரன்களுடன் தனது டெஸ்ட் கரியரை கவாஸ்கர் முடித்துக்கொண்டார். மேலும், அந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான்தான் தொடர் நாயகன் விருது வென்றார்.

சச்சின் டெண்டுல்கர்

பின்னாளில், கவாஸ்கரின் இந்தச் சாதனையை 2005-ல் மற்றொரு இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் முறியடித்தார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 15,921 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர்தான் இன்றும் முதலிடத்தில் இருக்கிறார்.

Dhoni: `One Last Time' - தோனிக்கு இதுதான் கடைசி சீசன்? சென்னை வந்த தோனியின் டி-ஷர்ட்டில் Morse Code

இந்தியன் பிரீமியர் லீக்கின் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுடன் சேப்பாக்கத்... மேலும் பார்க்க

IPL 2025: நெருங்கும் ஐபிஎல்; சென்னை வந்த CSK வீரர்கள் - போட்டிகள் முழு விவரம் இங்கே!

ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2024 இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு... மேலும் பார்க்க

கடைசி பந்தில் ரன்னில் அவுட்... தோனியை கண்முன் கொண்டுவந்த RCBW; WPL வரலாற்றில் முதல் சூப்பர் ஓவர்

மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக அரங்கேறிய சூப்பர் ஓவரில், ஆர்.சி.பி அணியை உத்தரப்பிரதேச வாரியர்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறது.நடப்பு WPL-ன் ஒன்பதாவது போட்டியில் ப... மேலும் பார்க்க

``பவுலிங் மோசமா இருக்கு; இனிமேலும் பொறுக்க முடியாது..." - பாக். அணி குறித்து வாசிம் அக்ரம்

பாகிஸ்தான் அணியின் பவுலிங் மிக மோசமாக இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் விமர்சித்திருக்கிறார்.2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி வழக்கம்போல குரூப் சுற்றிலேயே வெளியேறி இருக்கி... மேலும் பார்க்க

CT 2025: `இந்தியாவுக்கு மட்டும் ஒரே மைதானம்... பெரிய சாதகம்' - பேட் கம்மின்ஸ் கூறுவதென்ன?

பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.சி.சி தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால், அதுவுமே முழுமையாகப் பாகிஸ்தானில் நடைபெறவில்லை. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு வர முடியாது என பி.சி.சி.ஐ... மேலும் பார்க்க

Sriram Sridharan: ஆஸி., அணிக்கு 6 வருடம் பயிற்சயளித்த ஸ்ரீராம் - உதவிப் பயிற்சியாளராக நியமித்த CSK

சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் மார்ச் 22-ம் தேதி கொல்கத்தா vs பெங்களூரு போட்டியுடன் இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 18-வது சீசன் தொடங்கவிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் இரு போட... மேலும் பார்க்க