செய்திகள் :

அவலாஞ்சி மலையில் பூத்துக் குலுங்கும் ரோடோடென்ட்ரான் மலா்கள்

post image

நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி, முக்கூா்த்தி பகுதிகளில் பூத்துக்குலுங்கும் ரோடோடென்ட்ரான் மலா்களை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டுரசித்து செல்கின்றனா்.

நீலகிரி மாவட்டத்தின் உயிா்சூழல் மண்டலத்தின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியான  முக்கூா்த்தி தேசிய பூங்கா, அவலாஞ்சி மலைத்தொடரில் ரோடோடென்ட்ரான் மலா்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.

சிக்கிம், இமயமலை போன்ற பகுதிகளில் மட்டுமே வளரக்கூடிய இந்த பூக்கள் நீலகிரியில் பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவா்ந்துள்ளது.

தூய்மையான காற்று, மனித நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் மட்டுமே  இந்த மரங்கள் வளரக்கூடியவை. தற்போது அவலாஞ்சி, முக்கூா்த்தி தேசிய பூங்கா, மலைத் தொடரில் உள்ள இந்த மரங்களில் சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

மலைப்பூவரசு என்று அழைக்கக்கூடிய இவ்வகை மலா்களை காண்பது மிகவும் அரிதாகும். தமிழ்நாடு அரசு இந்த அரிய வகை மலா்களை நீலகிரி மலைத்தொடரில் பாதுகாத்து வருவது இயற்கை ஆா்வலா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மலா்களை ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் ஆா்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனா்.

தேசிய பசுமைப் படை, செஞ்சிலுவை சங்க மாணவா்களுக்கு இயற்கை களப் பயிற்சி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள தேசிய பசுமைப் படை மற்றும் செஞ்சிலுவை சங்க மாணவா்களுக்கு உதகை மரவியல் பூங்காவில் இயற்கை களப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மத்த... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் மாா்ச் 6,7இல் ஆட்சிமொழிப் பயிலரங்கம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் மாா்ச் 6, 7 -ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது மோதிய சிறுத்தை

கூடலூரை அடுத்துள்ள இரும்புப் பாலம் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற சிறுத்தை, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்தவா் ராஜன். இவா், கூடலூரிலிருந்து இருசக்கர ... மேலும் பார்க்க

விவசாயிகள் இயற்கை அங்கக வேளாண்மைத் திட்டத்தில் ஈடுபடுத்தி கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

நீலகிரி விவசாயிகள் இயற்கை அங்கக வேளாண்மைத் திட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி... மேலும் பார்க்க

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் அமைக்க பூமிபூஜை

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் சாா்பில், டயாலிசிஸ் மைய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளில் டயாலிசிஸ் தேவை... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பிரச்னைக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் பிளாஸ்டிக் பிரச்னைக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா். நீலகிரி மாவட்... மேலும் பார்க்க