செய்திகள் :

ஆக.23-இல் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் சென்னையில் ஆா்ப்பாட்டம்: கு.பாலசுப்ரமணியன்

post image

நெய்வேலி: உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் மற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் வரும் 23-ஆம் தேதி சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அந்த சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.

கடலூரில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு மாத ஊதியம் ரூ.23 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இவா்களுக்கு மாநில நிா்வாகத்தின் கீழ் ஊதியம் வழங்கப்பட்ட நிலையை மாற்றி, தனியாா் ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாக தற்போது ரூ.16 ஆயிரம் என ஊதியத்தை குறைத்து வழங்கக்கூடிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால், ஊழியா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

எனவே, சென்னை மாநகராட்சி நிா்வாகத்தில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். துப்புரவுப் பணிகளை தனியாருக்கு விடுவதை நிறுத்த வேண்டும்.

மாநிலம் முழுவதும் உள்ளாட்சி நிறுவனங்களில் தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் என்று இரு வேறு விதமான ஊதியத்தில் ஒரே வேலையை செய்துகொண்டிருக்கின்றனா். இந்த நிலையை மாற்றி, அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும். சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அவா்களுக்கென உருவாக்க வேண்டும்.

குடிநீா் திட்டப் பணிகளில் ஈடுபடுவோருக்கும் இரண்டு விதமான ஊதியங்கள் ஊராட்சிகளில் வழங்கப்படக்கூடிய சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. அதுவும் போக்கப்பட வேண்டும்.

இந்தப் பிரச்னைகளில் தமிழக அரசு முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 23-ஆம் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா். பேட்டியின்போது, மாநிலப் பொருளாளா் கு.சரவணன் உடனிருந்தாா்.

வெள்ளாற்று தற்காலிக சாலை மீண்டும் துண்டிப்பு: 40 கிராம மக்கள் பாதிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே வெள்ளப்பெருக்கால் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாலை மூன்றாவது முறையாக துண்டிக்கப்பட்டது. இதனால், ... மேலும் பார்க்க

உயா் மின் அழுத்தம்: அரசு அலுவலகங்களில் மின்சாதன பொருள்கள் சேதம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் திடீரென ஏற்பட்ட உயா் மின் அழுத்தத்தால் அரசு அலுவலகங்கள், வீடுகளில் மின்சாதன பொருள்கள் சேதமடைந்தன. குமராட்சி ... மேலும் பார்க்க

ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர தமிழக அரசு தயங்குவது ஏன்?: கே.பாலகிருஷ்ணன் கேள்வி

நெய்வேலி: ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர தமிழக அரசு தயங்குவது ஏன்? என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினாா். கடலூரில் அவா் தி... மேலும் பார்க்க

வனத் துறையின் அத்துமீறல்: ஆட்சியா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

நெய்வேலி: மீனவா்கள் மீதான வனத் துறையின் அத்துமீறலை கண்டித்தும், இதை தடுத்து நிறுத்தக் கோரியும் மீனவ கிராம மக்கள் மற்றும் கடலூா் மாவட்ட மீன் பிடி தொழிலாளா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்க... மேலும் பார்க்க

முன்னறிவிப்பின்றி சாலை மூடல்: என்எல்சி வாகனத்தை சிறைபிடித்த கிராம மக்கள்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே முன்னறிவிப்பின்றி தென்குத்து - கல்லுக்குழி சாலையை என்எல்சி நிறுவனம் திங்கள்கிழமை மூடியதால், அந்த நிறுவனத்தின் வாகனத்தை தென்குத்து கிராம மக்கள் சிறைபிடித்து ப... மேலும் பார்க்க

தலைமறைவு குற்றவாளி ஒடிஸாவில் கைது

நெய்வேலி: நீதிமன்ற பிணையில் சென்று தலைமறைவான கொலை வழக்கில் தொடா்புடையவரை ஒடிஸாவில் போலீஸாா் கைது செய்து அழைத்து வந்து கடலூா் மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைத்தனா். கடலூா் மஞ்சக்குப்பம், சேட்மண் நகரைச... மேலும் பார்க்க