செய்திகள் :

ஆசியாவிலேயே மிகப்பெரிய பன்னோக்கு மருத்துவமனை! இந்தியாவில் எங்கு அமைய உள்ளது?

post image

ராஞ்சி: ஆசியாவிலேயே மிகப்பெரிய பன்னோக்கு மருத்துவமனையாக ’ரிம்ஸ்-2’ என்னும் திட்டம் அமையவுள்ளது.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ‘ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனம்(ரிம்ஸ்-2)’ அமையவுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக ரிம்ஸ்-2 அமையவுள்ளதால் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

ரிம்ஸ்-2 மருத்துவமனை திட்டமானது, நோயாளிகளுக்கென 2,600 படுக்கைகளுடன் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ளது. மருத்துவத்துறையின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒரே வளாகமாகவும் இது திகழும். தில்லியின் ஃபரீதாபாத்தில் உள்ள ‘அமிர்தா’ மருத்துவமனை திட்டத்தைப் பின்பற்றி ரிம்ஸ்-2 அமையவுள்ளதாக ஜார்க்கண்ட் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் இர்ஃபான் அன்சாரி தெரிவித்திருக்கிறார்.

ரிம்ஸ் - 2 திட்டம் குறித்து, ஜார்க்கண்ட் சுகாதாரத் துறை அமைச்சர் பேசியிருப்பதாவது, “ரிம்ஸ் - 2 வெறும் மருத்துவமனை அல்ல. ஜார்க்கண்ட்டின் மருத்துவ அமைப்பை உலக தரத்துக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை. இத்திட்டம் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையின்கீழ் விரைவாக அமல்படுத்தப்படும். கடந்த 20 ஆண்டுகளாக செயல்படுத்த முடியாத திட்டத்தை இப்போது நனவாக்கவுள்ளோம். ஒட்டுமொத்த தேசத்துக்கும் புது தரத்திலானதொரு சுகாதார அமைப்பாக ‘ரிம்ஸ்-2’ மருத்துவமனை வருங்காலத்தில் அமையும்” என்றார்.

இத்திட்டத்திற்கான பெரும்பகுதி நிதியை ஆசிய வளர்ச்சி வங்கியிலிருந்து பெறப்படவுள்ளது. அதன்படி, ரூ. 1,000 கோடி நிதியுதவி பெறப்பட்டு இத்திட்டம் சாத்தியமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதிச் செலவை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் நிறைவடைந்த பின்னர், கிழக்கு இந்திய பகுதிகளுக்கான முக்கிய சுகாதார மையமாகவும், மருத்துவ சுற்றுலா தலமாகவும் ஜார்க்கண்ட் மாறுவது மட்டுமில்லாது, ஒட்டுமொத்த தேசத்துக்குமான மருத்துவ சுற்றுலா தலமாகவும் விளங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RIMS-2 project: After the completion of this project, Jharkhand will become the major healthcare hub and medical tourism destination not only of eastern India but of the entire country

கொல்கத்தா ஐஐஎம் கல்வி வளாகத்தில் பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன்!

கொல்கத்தா: கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிறுவன வளாகத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ள வழக்கின் விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு இன்று(ஜூலை 19) ஜாமீன் வழங்கப்பட... மேலும் பார்க்க

மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சிறுமி உயிருக்கு போராட்டம்: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார்!

ஒடிஸாவில் மர்ம நபர்களல் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமியைக் காப்பாற்ற தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. உயர்நிலை சிகிச்சைக்காக அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படவுள்ளார்.ப... மேலும் பார்க்க

படேல் சமூகம் குறித்து சர்ச்சை கருத்து: மகாராஷ்டிரம் குஜராத் இடையே புது பிரச்னை!

அகமதாபாத்: படேல் சமூகத்தைக் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறி ராஜ் தாக்கரே மீது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிர நவநிர்மான் சேனை(எம்.என்.ஸ்.) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சர்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் 9 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

மேற்கு வங்கத்தில் 9 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள தமாகாளி படகுப் பாதையில் இருந... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விபத்து: என்ன நடந்தது தெரியுமா? - அமெரிக்க விசாரணை அமைப்பின் தகவல்கள்

அகமதாபாத் நகரில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்படலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த விமான விபத்து விசாரணை அமைப்பான ’என்.டி.எஸ்.பி.’ பதிவிட்டுள்ளது.அகமதாபாத்தில் கடந்த ஜூ... மேலும் பார்க்க

உ.பி.யில் மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபர்!

உத்தரப் பிரதேசத்தில் மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபரால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், பண்டாவில் அசோக்(35) என்பவர் மதுபோதையில், தனது வீட்டிற்குள் நுழைந்த உயிருள்ள பாம்பை விழுங்கி... மேலும் பார்க்க