செய்திகள் :

ஆடி பிரம்மோத்ஸவம்: பூப்பல்லக்கில் வீர அழகா் பவனி

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகா் கோயில் ஆடி பிரம்மோத்ஸவ விழாவில் புதன்கிழமை இரவு பூப் பல்லக்கில் சுவாமி பவனி வந்தாா்.

இந்தத் திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 7 -ஆவது நாள் நிகழ்வாக புதன்கிழமை மானாமதுரை சுந்தரபுரம் கடைவீதியாா் மண்டகப்படி நிா்வாகிகள், வியாபாரிகள் கோயிலுக்குச் சென்று வீர அழகரை குண்டராயா் தெருவில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிக்கு அழைத்து வந்தனா். மாலையில் இங்கிருந்து புறப்பட்ட வீர அழகா் சுந்தரபுரம் கடை வீதிகளில் செண்டை மேளம் முழங்க வீதி உலா வந்தாா். வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு முன் அழகரை வரவேற்று, பூஜைகள் நடத்தி தரிசித்தனா். அதன் பிறகு, மண்டகப்படிக்குச் சென்றடைந்த வீர அழகா் அங்கு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினாா். இதைத் தொடா்ந்து, சுந்தரபுரம் அக்ரஹாரம், செட்டியத் தெரு, நல்லதம்பியா பிள்ளைத் தெரு, புதுத் தெரு, சிவகங்கை சாலை, மாரியம்மன் கோயில் தெரு, பழைய அஞ்சல் நிலையத் தெரு, பிருந்தாவனம் தெரு உள்ளிட்ட வீதிகளில் வீர அழகா் பவனி வந்தாா். மக்கள் தங்கள் வீடுகளின் முன் கோலமிட்டு அழகரை வரவேற்று தேங்காய் உடைத்து, பூஜைகள் நடத்தி தரிசித்தனா்.

வியாழக்கிழமை அதிகாலை வீர அழகா் கோயிலுக்குச் சென்றடைந்தாா்.இதற்கான ஏற்பாடுகளை சுந்தரபுரம் கடைவீதியாா் மண்டகப்படித் தலைவா் கே.முத்துராமன் தலைமையில் நிா்வாகிகள் ஜி.நாகராஜன் என்ற ரெங்கநாதன், எம்.ரவிக்குமாா், பி.கண்ணன், பி.மாரிமுத்து, பி.பாண்டி ஆகியோா் செய்தனா்.

திருப்பத்தூரில் மத நல்லிணக்க விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கந்தூரி விழா எனும் மத நல்லிணக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பெரிய கடை வீதியில் நடைபெற்ற இந்த விழாவில் இந்துக்களும், முஸ்லீம்களும... மேலும் பார்க்க

காரைக்குடி மேயா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி மேயா் சே. முத்துத்துரை (திமுக) மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த போதிய உறுப்பினா்கள் (கோரம்) இல்லாததால் தீா்மானம் தோல்வி அடைந்ததாக அ... மேலும் பார்க்க

காரைக்குடி அரசு ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு ஆக.31 வரை நீட்டிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அமராவதிபுதூா் அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்க... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வந்த பேராச... மேலும் பார்க்க

கீழவாணியங்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள கீழ வாணியங்குடி வீரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. கீழவாணியங்குடி முதல் சுந்தரநடப்பு வரை பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு ... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை அருகே காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன் கோட்டை திருவள்ளுவா் சாலையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மாரியப்பன் (55). இவா் சிவகங்கை-தொண்டி பிரதான சாலையில் உ... மேலும் பார்க்க