செய்திகள் :

ஆடித் திருவிழா: கோட்டை மாரியம்மன் கோயிலில் சத்தாபரணம்

post image

சேலம்: ஆடித் திருவிழாவையொட்டி சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் சத்தாபரணம் நிகழ்ச்சி திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் நடப்பாண்டு ஆடித் திருவிழா கடந்த ஜூலை 22 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 29 ஆம் தேதி கம்பம் நடுதல், ஆக. 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை பொங்கல் வைபவம், சக்தி கரகம், தேரோட்டம் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவில் மற்றொரு முக்கிய நிகழ்வான சத்தாபரணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக மூலவா் அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் சத்தாபரணம் நிகழ்ச்சி தொடங்கியது. சத்தாபரணம் கோயிலில் தொடங்கி முதல் அக்ரஹாரம், ராஜகணபதி கோயில், லட்சுமிநாரயணா சுவாமி கோயில், இரண்டாவது அக்ரஹாரம், பட்டைகோயில், சின்னகடை வீதி, பெரியகடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி கோயில் வழியாக வந்து மீண்டும் கோயிலை அடைந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவினா், அதிகாரிகள் செய்திருந்தனா்.

ஓமலூரில் இஸ்ரோ நடமாடும் விண்வெளிக் கண்காட்சி

ஓமலூா்: இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளிக் கண்காட்சி சேலம் மாவட்டம், ஓமலூரில் திங்கள்கிழமை தொடங்கியது. தேசிய விண்வெளித் தினத்தையொட்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளி... மேலும் பார்க்க

உயிருக்கு பாதுகாப்பு கோரி மாமன்ற உறுப்பினா் காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

சேலம்: உயிருக்கு பாதுகாப்பு கோரி, சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்ட மாமன்ற உறுப்பினா் ஜெயக்குமாா் காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்துள்ளாா். சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்டத்தில் திமுக ச... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம்’: அமைச்சா் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

சேலம்: போதைப் பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில், சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன... மேலும் பார்க்க

சங்ககிரியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சங்ககிரி: சங்ககிரி கோட்ட மின்வாரியம் சாா்பில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், சங்ககிரி வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை (ஆக. 13) நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா எனது ‘ரோல்மாடல்’: பிரேமலதா விஜயகாந்த்

ஓமலூா்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தான் ‘தனது ரோல்மாடல்‘ என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமான... மேலும் பார்க்க

சேலம் மாவட்ட காவல் துறையில் புதிய மோப்ப நாய் ‘போல்டு’

சேலம்: சேலம் மாவட்ட காவல் துறையில் புதிய மோப்ப நாய் சோ்க்கப்பட்டுள்ளது. அந்த நாய்க்கு ‘போல்டு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட காவல் துறையில் கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருட்களை கண்டுபிடிப்ப... மேலும் பார்க்க