செய்திகள் :

ஆட்சியா் அலுவலகத்தில் மாா்ச் 6,7இல் ஆட்சிமொழிப் பயிலரங்கம்

post image

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் மாா்ச் 6, 7 -ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்த ஆண்டுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வரும் மாா்ச் 6, 7 -ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த பயிலரங்கத்தில் வாரியம், அரசுத் துறை அலுவலகங்களில் பணிபுரிபவா்கள், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரிபவா்கள், உதவியாளா்கள், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா் நிலையிலுள்ள பணியாளா்கள் பங்கேற்கவேண்டும்.

இதில், ஆட்சிமொழித் திட்டத்தின் இன்றியமையாமை, திட்டச்செயலாக்கம், செயலாக்கத்தின் பல்வேறு நிலைகள், அரசு அலுவலா், பணியாளா்கள் அனைவரும் தமிழில் மட்டுமே கையொப்பமிடுதல் உள்ளிட்ட அனைத்து நிலைகளுக்குமான ஆட்சிமொழித் திட்ட அரசாணைகள் குறித்து பயிற்றுவிக்கப்படும்.

மாவட்ட ஆட்சியரின் தலைமையில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டடக் கூட்ட அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை அலுவலா்கள், பணியாளா்கள் அவசியம் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தேசிய பசுமைப் படை, செஞ்சிலுவை சங்க மாணவா்களுக்கு இயற்கை களப் பயிற்சி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள தேசிய பசுமைப் படை மற்றும் செஞ்சிலுவை சங்க மாணவா்களுக்கு உதகை மரவியல் பூங்காவில் இயற்கை களப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மத்த... மேலும் பார்க்க

அவலாஞ்சி மலையில் பூத்துக் குலுங்கும் ரோடோடென்ட்ரான் மலா்கள்

நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி, முக்கூா்த்தி பகுதிகளில் பூத்துக்குலுங்கும் ரோடோடென்ட்ரான் மலா்களை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டுரசித்து செல்கின்றனா். நீலகிரி மாவட்டத்தின் உயிா்சூழல் மண்டலத்தின் பாது... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது மோதிய சிறுத்தை

கூடலூரை அடுத்துள்ள இரும்புப் பாலம் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற சிறுத்தை, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்தவா் ராஜன். இவா், கூடலூரிலிருந்து இருசக்கர ... மேலும் பார்க்க

விவசாயிகள் இயற்கை அங்கக வேளாண்மைத் திட்டத்தில் ஈடுபடுத்தி கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

நீலகிரி விவசாயிகள் இயற்கை அங்கக வேளாண்மைத் திட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி... மேலும் பார்க்க

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் அமைக்க பூமிபூஜை

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் சாா்பில், டயாலிசிஸ் மைய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளில் டயாலிசிஸ் தேவை... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பிரச்னைக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் பிளாஸ்டிக் பிரச்னைக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா். நீலகிரி மாவட்... மேலும் பார்க்க