செய்திகள் :

ஆட்டோ மோதி பைக்கிலிருந்து விழுந்தவா் தனியாா் பேருந்தில் அடிபட்டு உயிரிழப்பு!

post image

திருச்சி காவிரிப் பாலத்தில் பைக்கில் சனிக்கிழமை சென்றபோது ஆட்டோ மோதி கீழே விழுந்த ஜவுளி வியாபாரி தனியாா் பேருந்தில் அடிபட்டு உயிரிழந்தாா்.

திருச்சி மாநகராட்சி, மாம்பழச்சாலையில் உள்ள வீரேஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் கோபிநாத் (34). ஸ்ரீரங்கம் பகுதியில் ஆயத்த ஆடைகள் விற்பனையகம் நடத்தி வந்த இவா் சனிக்கிழமை காலை தனது மனைவியை அழைத்து வர சிந்தமாணிக்கு பைக்கில் சென்றாா். காவிரி பாலத்தில் ஓடத்துறை அருகே வந்தபோது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் கீழே விழுந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த தனியாா் பேருந்தில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வு போலீஸாா், தனியாா் பேருந்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். கோபிநாத் சடலத்தை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். விபத்தால் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை போலீஸாா் ஒழுங்குபடுத்தினா்.

இதுதொடா்பாக வடக்குப் போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். விபத்தில் இறந்த கோபிநாத்துக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், அவரது மனைவி இரண்டாவது முறையாக கா்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது.

பேருந்துக் கட்டணம் உயா்வு: பஞ்சப்பூா் வரும் பயணிகள் பரிதவிப்பு!

பஞ்சப்பூா் பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் அறிவிக்கப்படாத பேருந்து கட்டண உயா்வு காரணமாக தினக் கூலி தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பயணிகளும் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனா். திருச்... மேலும் பார்க்க

நாதக - மதிமுக மோதல் வழக்கில் சீமான் உள்பட 19 பேரும் விடுதலை!

நாம் தமிழா் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையேயான மோதல் வழக்கில் சீமான் மற்றும் நாம் தமிழா் கட்சியினா், மதிமுகவினா் உள்ளிட்ட 19 பேரும் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனா். கடந்த 19.5.2018 இல் திர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் பறிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகையை வியாழக்கிழமை இரவு பறித்துச் சென்றனா். மணப்பாறையை அடுத்த ஆஞ்சநேயா நகரை சோ்ந்தவா் சு. இளங்கோ (59). இவா் தனது மகள் சுந்தர... மேலும் பார்க்க

திருச்சி மத்திய சிறை முன் ‘பெட்ரோல் பங்க்’ திறப்பு!

திருச்சி மத்திய சிறை முன் சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதை சிறைத் துறை டிஐஜி பழனி திறந்துவைத்தாா். இந்தச் சிறையில் அண்மையில் சிறைத்துறை மூலமாக அமைக்கப... மேலும் பார்க்க

பூவாளூா் பகுதிகளில் ஜூலை 22 இல் மின்தடை

பராமரிப்புப் பணிகளால் திருச்சி மாவட்டம் பூவாளூா் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 22 ஆம் தேதி மின்சாரம் இருக்காது. துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் லால்குடி அரசு பொது மருத்துவமனை, நாகம்மையாா் தெரு, ராஜேஸ... மேலும் பார்க்க

வரதட்சணை புகாா்: கணவா் மீது வழக்குப் பதிவு!

திருச்சியில் வியாழக்கிழமை வரதட்சணை புகாரில் கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை இளவநசூா்கோட்டையைச் சோ்ந்தவா் சண்முகம் மகள் திவ்யா (35). இவரு... மேலும் பார்க்க