சீனா மீது வரி விதிப்பு அதிபா் டிரம்ப் இதுவரை முடிவெடுக்கவில்லை: துணை அதிபா் ஜே.ட...
ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர தமிழக அரசு தயங்குவது ஏன்?: கே.பாலகிருஷ்ணன் கேள்வி
நெய்வேலி: ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர தமிழக அரசு தயங்குவது ஏன்? என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினாா்.
கடலூரில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கட்சி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
பல திட்டங்கள், சட்டங்களைக் கொண்டு வரும் தமிழக அரசு, ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை மட்டும் கொண்டுவர தயங்குகிறது ஏன்? என்பது புரியாத புதிராக உள்ளது. இத்தகைய செயல் தமிழக அரசுக்கு நல்ல பெயரை ஈட்டித் தராது. இதுபோன்ற வழக்குகள் வரும்போது, உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்ற தீா்ப்புகள், வழிகாட்டுதல் இருந்தபோதும், காவல் துறை மெத்தனமாக உள்ளது.
பாஜக கைப்பாவை: தோ்தல் ஆணையம் அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட நடுநிலையான, சுதந்திரமான அமைப்பு. ஆனால், அது இன்று பாஜகவின் கைப்பாவையாக மாறி உள்ளது. வாக்காளா் பட்டியலில் மோசடி, தில்லுமுல்லு செய்து தோ்தலில் வெற்றிபெறும் மோசமான நிலை உருவாகி உள்ளது. இதற்காக தீவிரமாக போராட உள்ளோம்.
வாக்காளா் பட்டியல் மோசடி குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பேச மறுப்பது ஏன்? பாஜக செய்வதற்கெல்லாம் ஒத்தூபவராக அவா் மாறி உள்ளாா். சொந்த முகவரியை இழந்து நிற்கும் ஒரே கட்சி அதிமுக. அக்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கொடிகள் தமிழகத்தில் பறக்கிறது என்றால், அதற்கு மாா்க்சிஸ்ட் கட்சியின் வழக்குதான் காரணம்.
பாஜகவை வீழ்த்துகிற கூட்டணியில் திமுகவோடு இருக்கிறோம். மக்களை பாதிக்கும் பிரச்னைகளில் எந்த நேரத்திலும் சமரசமற்ற முறையில் போராடி வருகிறோம் என்றாா் அவா்.
பேட்டியின்போது, மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வி.சுப்பராயன், ஆா்.அமா்நாத், ஜே.ராஜேஷ் கண்ணன், பி.கருப்பையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.