செய்திகள் :

ஆண்களைவிட அதிக வேலை செய்யும் பெண்கள்!

post image

வீட்டைப் பராமரிப்பதில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக நேரம் ஒதுக்குவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அதாவது, வீட்டு வேலைகளைச் செய்வது, வீட்டில் உள்ளோரை பராமரிப்பது போன்ற ஊதியம் இல்லாத பணிகளை அதிகம் செய்வது பெண்களே என்று தரவுகள் கூறுகின்றன.

வீட்டைப் பராமரிக்க பெண்கள் நாளொன்றுக்கு சராசரியாக 289 நிமிடங்களை ஒதுக்குவதாகவும், ஆனால் ஆண்கள் வெறும் (சராசரியாக) 97 நிமிடங்களை மட்டுமே ஒதுக்குவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

2019ஆம் ஆண்டு நாளொன்றுக்கு 299 நிமிடங்களை பெண்கள் ஒதுக்கியிருந்த நிலையில், 5 ஆண்டுகள் கழித்து 2024-ல் 10 நிமிடங்கள் மட்டுமே பெண்களுக்கு குறைந்துள்ளது. அதாவது ஆண்களைக் காட்டிலும் 201 நிமிடங்கள் கூடுதலாக வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள் பெண்கள்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி - டிசம்பர் வரையிலான ஆய்வுக்குப் பிறகு, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி,

ஊதியமின்றி வீட்டு உறுப்பினர்களைப் பராமரிப்பதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் 62 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்குகிறார்கள். பெண்கள் 137 நிமிடங்களை ஒதுக்கும் நிலையில், ஆண்கள் 75 நிமிடங்களை மட்டுமே செலவிடுகின்றனர். இதில் 15 - 59 வயது வரையிலான பெண்கள் ஈடுபடுகின்றனர்.

வீட்டு வேலைகளைச் செய்வதற்கு பெண்கள் 289 நிமிடங்களை ஒதுக்குகின்றனர். இதே வேளையில் ஆண்கள் 97 நிமிடங்களை மட்டுமே ஒதுக்குகின்றனர்.

புதிதாக கற்றுக் கொள்வதற்கு பெண்கள் 413 நிமிடங்களையும் ஆண்கள் 415 நிமிடங்களையும் ஒதுக்குகின்றனர்.

தங்களின் தனிப்பட்ட பராமரிப்புக்காக பெண்கள் 706 நிமிடங்களை ஒதுக்குகிறார்கள். இதில் பெண்களை விட ஆண்கள் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். ஆண்கள் 710 நிமிடங்களை ஒதுக்கிகிறார்கள்.

தொழில்முறை வேலைவாய்ப்பு தொடர்பான செயல்களில் ஆண்கள் 473 நிமிடங்களையும் பெண்கள் 341 நிமிடங்களையும் ஒதுக்குவதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க | கும்பமேளா: லாபம் குவித்த 'இன்ஸ்டன்ட்' தொழில்கள்!

மகாராஷ்டிரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயம் பறிமுதல்: 8 போ் கைது

மகாராஷ்டிரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, 8 போ் கைது செய்யப்பட்டனா். எழும்பூா் காந்தி இா்வின் சாலையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ... மேலும் பார்க்க

‘பொய்களைப் பரப்பும் பாகிஸ்தான்’ -ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஜெனீவா: ‘சா்வதேச உதவிகளால் பிழைத்து வரும் பாகிஸ்தான், தனது ராணுவம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளால் தெரிவிக்கப்படும் பொய்களை சா்வதேச அமைப்புகளில் பரப்பி வருகிறது’ என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாடம் எடுப்பது விமர்சிக்கத்தக்கதே: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா பதிலடி

இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் இந்திய தூதரக அதிகாரி பதிலளித்தார்.ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் கூட... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு: ராகுல் காந்திக்கு ரயில்வே அமைச்சர் கேள்வி!

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு விவகாரம் பர... மேலும் பார்க்க

கோவாவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவுக்கு இட்லிதான் காரணம்: பாஜக எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை

கோவாவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவுக்கு இட்லியே காரணம் என்று பாஜக எம்.எல்.ஏ. பேசியிருப்பது சமூக ஊடகங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கோவாவில் சமீபகாலமாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து ... மேலும் பார்க்க

பிரதமரின் திட்டத்தால் ஏழைகளின் பைகள் காலியாகிறது: கார்கே

விக்ஸித் பாரத் திட்டத்தால் இந்திய ஏழைகள் பணமின்றி தவிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.காங்கிரஸ் மூத்தத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, தனது எக்ஸ் பக்கப் பதிவில் கூறியதாவது ``பிரத... மேலும் பார்க்க