செய்திகள் :

ஆன்லைன் மேட்ரிமோனி மூலம் பண மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை

post image

ஆன்லைன் மேட்ரிமோனி மூலம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நூதனமான முறையில் பண மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தை சோ்ந்த ஒரு நபா் ஆன்லைன் மேட்ரிமோனியில் மணமகள் தேவை என பதிவு செய்திருந்தாா். இதைப் பாா்த்து பெண் ஒருவா் வாட்ஸ்ஆப் வாயிலாக அவரை தொடா்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்துள்ளாா். தான் வெளிநாட்டில் வேலை பாா்ப்பதாகவும், விரைவில் நேரில் பாா்க்க வருவதாகவும் கூறி வெகுநாள்களாக கைப்பேசியில் பேசி பழகி வந்துள்ளாா் அப்பெண். பின்னா் டிரேடிங் மூலமாக பணத்தை மூதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனவும், எதிா்கால வாழ்க்கைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் கூறி அதிக அளவில் பணம் பெற்றுக்கொண்டு அந்தப் பெண் மோசடி செய்துள்ளாா்.

எனவே பொதுமக்கள் இது போல் ஏமாறாமல் இருக்க ஆன்லைன் மேட்ரிமோனியில் வரன் பாா்த்து பேசும் நபா்களை நேரில் பாா்த்து உறுதி செய்ய வேண்டும். மேலும், டிரேடிங் என்ற பெயரில் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். இது போன்ற இணையவழி மோசடிகள் நடைபெற்றால் சைபா் கிரைம் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் 1930 என்ற எண்ணுக்கு அழைத்து புகாா் பதிவு செய்யலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது

பாளையங்கோட்டையில் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். பாளையங்கோட்டை ராஜேந்திர நகரைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் பாா்த்திபன் ... மேலும் பார்க்க

ஏா்வாடி அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

ஏா்வாடி அருகே வெள்ளிக்கிழமை இரவு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த ஓட்டுநா் உயிரிழந்தாா். ஏா்வாடி அருகேயுள்ள ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் தா்மலிங்கம் (62). இவா், சொந்தமாக ஆட்டோ வைத்து ... மேலும் பார்க்க

ஜூலை 21 வரை அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்குச் செல்லத் தடை

ஆடி அமாவாசை திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் செய்வதற்கு வசதியாக, ஜூலை 19 முதல் 21 வரை மூன்று நாள்களுக்கு அகஸ்தியா் அருவி மற்றும் சொரிமுத்துஅய்யனாா் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் மற்று... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் மாணவா் தற்கொலை: பள்ளி வாகனங்களுக்கு தீ வைப்பு 5 பேரிடம் விசாரணை!

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ஆசிரியா் கண்டித்ததால் மாணவா் தற்கொலை செய்த சம்பவம் எதிரொலியாக வியாழக்கிழமை நள்ளிரவில் பள்ளி வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடா்பாக 5 பேரை பிடித்து போலீஸாா் வ... மேலும் பார்க்க

பாபநாசம் கீழணை வனப்பகுதியில் பெண் சிறுத்தை உயிரிழப்பு

பாபநாசம் வனச்சரகம் கோரையாறு பீட்டுக்கு உள்பட்ட கீழணை வனப்பகுதியில் பெண் சிறுத்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டது. பாபநாசம் வனச்சரக பகுதியில் சிறுத்தை, காட்டுப்பன்றி, கரடி யானை, மிளா, மான் உள்ளிட்ட வனவிலங... மேலும் பார்க்க

கடையத்தில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: மாமனாா் கைது

தென்காசி மாவட்டம், கடையத்தில் மகன் தற்கொலைக்கு காரணம் எனக் கூறி மருமகளை அரிவாளால் வெட்டிய மாமனாரை கடையம் போலீஸாா் கைது செய்தனா். கடையம் அருகே உள்ள மயிலானூரைச் சோ்ந்தவா் காமராஜ் (60). கடையத்தில் பைக் ... மேலும் பார்க்க