செய்திகள் :

"ஆபரேஷன் சிந்தூர் பற்றி நாடாளுமன்றத்தில் பதிலளிக்கத் தயார்" - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

post image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடியாக மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

பின்னர் இரு தரப்பிலிருந்தும் மோதல் அதிகரிக்கவே பின் மோதல் நிறுத்தப்பட்டது.

Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்
Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்

மோதல் நிறுத்தப்பட்டது என முதலில் அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "வர்த்தகத்தை முன்வைத்து நான்தான் இந்த மோதலை நிறுத்தினேன்" என்று கூறிவருகிறார்.

ஆனால், மத்திய அரசோ இதனைத் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.

அதேசமயம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்தியா - பாகிஸ்தான் மோதலில் அமெரிக்காவின் தலையீட்டைக் குறிப்பிட்டு மத்திய அரசை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில், நாளை (ஜூலை 21) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியிருக்கும் சூழலில், ஆபரேஷன் சிந்தூர் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருக்கிறார்.

இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்துக்குப் பிறகு பேசிய கிரண் ரிஜிஜூ, "ஆபரேஷன் சிந்தூர் போன்ற முக்கியமான விஷயங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நாடாளுமன்ற அவையின் சரியான செயல்பாட்டை உறுதி செய்ய அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

ட்ரம்பின் கூற்று குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு நாங்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் சரியான முறையில் பதிலளிப்போம்" என்று கூறினார்.

மேலும், இந்த மழைக்கால கூட்டத்தொடரில் 17 மசோதாக்களை அரசு தாக்கல் செய்யவிருப்பதாகவும் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

'கூட்டணியைக் கலைக்கக் களத்தில் குதிக்கும் கட்சிகள்' - அனல் தகிக்கும் தமிழக அரசியல்களம்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள்தான் இருக்கின்றன. ஆளும் தி.மு.க அரசு ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைக்கத் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி அரியணையைப் பி... மேலும் பார்க்க

ராகுல் காந்தியை சந்திக்கிறாரா விஜய்? - செல்வப்பெருந்தகை பதில்!

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது ராகுல் காந்தியும் விஜய்யும் நேரில் சந்திக்கவிருப்பதாக பரவி வரும் தகவல் குறித்தும் விளக்கம் கொடுத்திருக்... மேலும் பார்க்க

"எம்.பி-க்கள் வாடகை அலுவலகத்தில் இருக்கும் நிலை"- விசிக எம்.பி ரவிக்குமார் முதல்வருக்கு வேண்டுகோள்!

எழுத்தாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமானவர் முனைவர் ரவிக்குமார். ‘நிறப்பிரிகை’ என்ற பத்திரிக்கை மூலம் கருத்தியல் தளத்திலும், களச் செயல்பாடுகளுக்கு மனித உரிமை இயக்கம் என சமூ... மேலும் பார்க்க

"அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து பாமக MLA-க்கள் 3 பேர் & வழக்கறிஞர் பாலு சஸ்பெண்ட்" - ராமதாஸ்

பாமக-வில் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரின் மகனும் தலைவருமான அன்புமணிக்கு இடையே நிலவி வரும் கட்சி அதிகார மோதல் இன்னும் ஓய்ந்தபாடில்லை.கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி த... மேலும் பார்க்க

புதுவை: "முதல்வர் ரங்கசாமி இறந்தால் அவரை சித்தராக வழிபடுவர்" - அமைச்சர் ஜான்குமார் சர்ச்சை பேச்சு

புதுச்சேரி முதல்வரான ரங்கசாமி, சேலம் அப்பா பைத்தியம் சாமிகளின் தீவிர பக்தர். கோரிமேட்டில் சேலம் அப்பா பைத்தியம் சாமிகளுக்கு கோயில் கட்டி, தினம்தோறும் பூஜைகளும், அன்னதானமும் செய்து வருகிறார். அதனால் மு... மேலும் பார்க்க