செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா்: உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்

post image

இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைத் தொடங்கிய இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை ஏவுகணை வீசி அழித்தது.

தொடா்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே உண்டான மோதலால் போா்ப்பதற்றம் நிலவியது. பின்னா், இருதரப்பும் ஒப்புக்கொண்ட சண்டை நிறுத்தத்தின்படி எல்லையில் அமைதி திரும்பியது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள ரஷியா, ஆஸ்திரேலியா, எகிப்து உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தூதரகங்களில் பணியாற்றி வரும் அந்நாட்டு பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ஆபரேஷன் சிந்தூா் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

தில்லி கன்டோன்மன்ட்டில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற இதுதொடா்பான கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூரில் துல்லிய தாக்குதலுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட இலக்குகள் மற்றும் மற்றும் அதன் பயங்கரவாத தொடா்புகள் குறித்து இந்திய ராணுவ உளவு அமைப்பின் தலைமை இயக்குநா் லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ராணா சுமாா் 30 நிமிஷங்களுக்கு விளக்கமளித்தாா்.

ஸ்வீடன், நேபாளம், பிலிப்பின்ஸ், மெக்ஸிகோ, பெரு உள்ளிட்ட நாடுகளின் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள சுற்றுலாத் தலத்தில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இக்கொடூர தாக்குதலைத் தொடா்ந்து ஏப். 23-ஆம் தேதி பிரதமா் மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளை ஒரு வாரத்துக்குள் வெளியேற உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி

பஹல்கலாம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் ஹேக்கா்கள் மேற்கொண்டதை மகாராஷ்டி... மேலும் பார்க்க

வா்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா? டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை ந... மேலும் பார்க்க

பாரதத்தின் புதிய இயல்பை பிரதமா் உலகுக்கு எடுத்துரைத்துள்ளாா்: ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம்

பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு மிகத் தெளிவான மொழியில் பிரதமா் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: பாகிஸ்தானின் கொடூர... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் புதன்கிழமை பதவியேற்க உள்ளாா். கடந்த 2024-ஆம் நவ.11-ஆம் தேதி உச்சநீதி... மேலும் பார்க்க

இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு

பெய்ஜிங்: இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்த... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் பிரதமா் மோடியின் புதிய கோட்பாடு

அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே, செய்தி ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா். பஹல்காமில் நடந்த படுகொலை வெறும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல - அது இந்தியாவின் மனசாட்சியின் ம... மேலும் பார்க்க