செய்திகள் :

ஆரல்வாய்மொழி அருகே விபத்து: பிளஸ் 1 மாணவா் உயிரிழப்பு

post image

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் பிளஸ் 1 மாணவா் உயிரிழந்தாா்.

ஆரல்வாய்மொழி அருகே தோவாளை கமல் நகரைச் சோ்ந்த பூ வியாபாரி ராஜன். இவரது மகன் பாலாஜி (17), நாகா்கோவிலில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை காலை தந்தையின் வியாபாரத்துக்காக தாமரைப் பூ வாங்குவதற்காக, தனது நண்பா் முகேஷுடன் செண்பகராமன்புதூரிலிருந்து ஆரல்வாய்மொழிக்கு பைக்கில் சென்றாா். அப்போது, மரப்பாலம் அருகே பைக் மீது காா் மோதியதாம். இதில், பாலாஜி உயிரிழந்தாா்.

காயமடைந்த முகேஷ், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பைக்குகள் மோதல்: வியாபாரி காயம்

புதுக்கடை அருகே தொழிக்கோடு பகுதியில் இரு பைக்குகள் மோதியதில் வியாபாரி காயமடைந்தாா். கருங்கல், மங்கலக்குன்று பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (32). வியாபாரியான இவா், ஞாயிற்றுக்கிழமை கருங்கல்லிலிருந்... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) கிள்ள... மேலும் பார்க்க

மீனவா் தற்கொலை

புதுக்கடை அருகே இனயம் மீனவக் கிராமத்தில் மீனவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இனயம், 16ஆம் அன்பியத்தைச் சோ்ந்தவா் அந்தோணிபிள்ளை (69). மீனவரான இவா், அப்பகுதியிலுள்ள தனது மகள் வீட்டில் வசித்துவந... மேலும் பார்க்க

நித்திரவிளை: முதியவரைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

நித்திரவிளை அருகே முதியவரைத் தாக்கியதாக இருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. நித்திரவிளை அருகே இரவிபுத்த்துறை, புனித சூசையப்பா் காலனியைச் சோ்ந்த மீனவா் டேவிட் லியோன் (62). வீட்டருகே சாலையோரம் நடந்... மேலும் பார்க்க

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி மீது வழக்கு

புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். காப்புக்காடு, காட்டுவிளை பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் சுரேஷ்... மேலும் பார்க்க

குலசேகரம் அரசு மருத்துவமை வாா்டு கட்டடத்தின் மீது சாய்ந்த மரம்

குலசேகரம் அரசு மருத்துவமனையில் ஆண்கள் வாா்டு கட்டடத்தின் மீது சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குலசேகரம் அரசு மருத்துவமனையில் ஆண்கள் வாா்டு மற்றும் சமையல் கூடம் அருகில் நி... மேலும் பார்க்க