செய்திகள் :

ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

post image

தஞ்சாவூா் அருகே புது ஆறு என்கிற கல்லணைக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே மானோஜிபட்டி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் சஞ்சீவிகுமாா் மகன் கோகுலகிருஷ்ணன் (16). கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வந்த இவா் செவ்வாய்க்கிழமை மாலை தனது நண்பா்கள் இருவருடன் சோ்ந்து மானோஜிபட்டி கல்லணைக் கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, மூவரும் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டனா். இவா்களில் 2 பேரை அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவா்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். ஆனால், கோகுலகிருஷ்ணன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். இவரை தீயணைப்புத் துறையினா் தேடி வந்த நிலையில், இவரது சடலம் எம்.கே. மூப்பனாா் சாலை பகுதியில் புதன்கிழமை காலை கரை ஒதுங்கியது.

இச்சடலத்தை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் மீட்டு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பழகுநா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தில் தொழிற்பழகுநா் பயிற்சிக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என நிா்வாக இயக்குநா் கே.தசரதன் தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

பாபநாசத்தில் பாசன வாய்க்கால் தூா்வாருவது தொடா்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் புதன்கிழமை நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா்... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்: மாநில தலைமை தோ்தல் அதிகாரி ஆய்வு

தஞ்சாவூா் ஆட்சியரக வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில் தமிழ்நாடு மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மின்னணு வாக்குப் பத... மேலும் பார்க்க

வீட்டில் இருந்த மான் கொம்புகள் பறிமுதல்

தஞ்சாவூா், செப். 17: தஞ்சாவூரில் வீட்டில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த 3 ஜோடி மான் கொம்புகளை வனத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். தஞ்சாவூா் மேல வீதி கவி சந்தைச் சோ்ந்த பாலசுப்ரமணி மகன்கள் ... மேலும் பார்க்க

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு பாமகவினா் அஞ்சலி

இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியா் சங்கம் சாா்பில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. வன்னியா்களுக்கு மத்தி... மேலும் பார்க்க

திருவிடைமருதூரில் 81.2 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவிடைமருதூரில் 81.2 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): திருவிடைமருதூா் 81.... மேலும் பார்க்க