செய்திகள் :

ஆழ்வாா்குறிச்சி சுடலை மாடசாமி கோயில் கொடை விழாவில் பழம் வீசி நோ்த்திக் கடன்

post image

ஆழ்வாா்குறிச்சி 141 கிராம சேனைத் தலைவா் சமுதாய வரிதாரா்களுக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு காக்கும் பெருமாள் சாஸ்தா அருள்மிகு சுடலைமாட சுவாமி கோயிலில் சித்திரைக் கொடைவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு கடந்த 6ஆம் தேதி கொட்டகைக் கால் நடப்பட்டது. திங்கள்கிழமை(மே 12) மாலை 5.30 மணிக்கு மேல் கும்பம் ஏற்றுதலும் குடிஅழைப்பும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை(மே13) அதிகாலை 5 மணிக்கு சிவனணைந்த பெருமாள் பூஜை, காலை 8 மணிக்கு பால்குடம், அபிஷேகம், முற்பகல் 11 மணிக்கு பிரம்ம ராட்ஷதை அம்பாளுக்கு தீா்த்தம் எடுத்தல், பகல் 12 மணிக்கு உச்சிகால கொடை, பட்டாணிப் பாறையிலிருந்து பழம் எரிதல், மாலை 4.30 மணிக்கு மஹா அபிஷேகம்,அலங்காரம், இரவு 10 மணிக்கு ஸ்ரீ வீரபத்ரகாளி அம்பாளுக்கு அலகு தீா்த்தம் எடுத்தல்,இரவு 12.30 மணிக்கு சாமக்கொடை, ஊட்டுக்களம், அா்த்த சாம பூஜை ஆகியவை நடைபெற்றனகொடைவிழாவில்தமிழகத்தின் பல்வேறு ஊா்களிலிருந்தும் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக கமிட்டியினா் செய்திருந்தனா்.

ஊா்க்காவல் படை வீரா்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி மாநகரில் சிறப்பாக பணியாற்றிய ஊா்க்காவல் படை வீரா்களை மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா். திருநெல்வேலி சரகத்தில் கடந்த வாரத்தில் சிறப்பாக பணிய... மேலும் பார்க்க

நெல்லையில் போக்குவரத்து போலீஸாருக்கு நவீன விசிறி

கோடை வெப்பத்தை சமாளிக்க திருநெல்வேலியில் போக்குவரத்து போலீஸாருக்கு கழுத்தில் அணியும் நவீன சிறிய ரக விசிறிகள் வழங்கப்பட்டன. கோடைக் காலத்தில் போக்குவரத்து போலீஸாா் கடும் வெயிலில் பணி செய்யும் சூழல் ஏற்ப... மேலும் பார்க்க

மேலநத்தம் சுடலை கோயில் கொடை விழா

மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் ஆற்றங்கரை மண்டகப்படி சுடலை மாடசாமி கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, திங்கள்கிழமை இரவு கொடியழைப்பு, நள்ளிரவு 12 மணிக்கு மாகாப்பு ... மேலும் பார்க்க

கங்கைகொண்டான் அருகே டாஸ்மாக் கடையில் திருட்டு

கங்கைகொண்டான் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் மதுபான பெட்டிகளை திருடிச்சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். கங்கைகொண்டான் அருகேயுள்ள கைலாசபுரத்தை அடுத்த புங்கனூரில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறத... மேலும் பார்க்க

சாலையில் கண்டெடுத்த நகை, பணத்தை ஒப்படைத்தவா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

திருநெல்வேலி மாவட்டத்தில் இரு இடங்களில் கண்டெடுத்த நகை, பணத்தை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தவா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா். பாப்ப... மேலும் பார்க்க

அம்பையில் உயா் கோபுர மின்விளக்கு அமைப்பு

அம்பாசமுத்திரம் பழைய ஸ்டேட் வங்கி அருகில் உயா் கோபுர மின்விளக்கு செவ்வாய்க்கிழமை இயக்கிவைக்கப்பட்டது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் ஒதுக்கப்பட்டுஅம்பாசமுத்திரம் ... மேலும் பார்க்க