செய்திகள் :

ஆஸி. கிரிக்கெட் வாரியத்தில் உயர் பதவி! நடுவர் பதவியை ராஜிநாமா செய்தார் டேவிட் பூன்!

post image

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் முன்னாள் ஆஸ்திரேய வீரர் டேவிட் பூனுக்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், ஐசிசி நடுவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பெரிய மீசைக்கு பிரபலமானவரான 64 வயதான டேவிட் பூன் ஆஸ்திரேலிய அணிக்காக 107 டெஸ்ட் மற்றும் 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவர் தற்போது பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடுவராக பணியாற்றி வருகிறார். இந்தத் தொடருக்குப் பின்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: கண்ணீருடன் இங்கிலாந்து வீரர்கள்..! வெற்றிக் களிப்பில் ஆப்கானிஸ்தான்!

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் மைக் பேர்ட் கூறுகையில், “டேவிட் கிரிக்கெட் வீரராக மட்டுமின்றி அவரின் அனுபவம் அணிக்கு மிக முக்கியப் பங்களிக்கும்” என்றார்.

1999 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற டேவிட் பூன், 2000 ஆம் ஆண்டில் இருந்து பல ஆண்டுகளாக அணித் தேர்வாளராக இருந்து வருகிறார். மேலும், 2011 ஆம் ஆண்டு ஐசிசியின் நடுவராக இணைந்தார்.

இவர் 2014 ஆம் ஆண்டு முதல் டாஸ்மேனியா கிரிக்கெட் சங்கத்தின் இயக்குநராகவும், 2022 ஆம் ஆண்டு முதல் தலைவராகவும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்திய அணியுடன் இணைந்த பந்துவீச்சு பயிற்சியாளர்..! தீவிர பயிற்சியில் வீரர்கள்!

பாகிஸ்தான் - வங்கதேசப் போட்டி ரத்து: மழைக்கு 2-வது வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதிய போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.பாகிஸ்தானில் நடைபெறும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப்-ஏ பிரில் உள்ள இந்தியா, நியூசிலாந்து ஆகி... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸின் ஆலோசகராக கெவின் பீட்டர்சன் நியமனம்!

தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில்... மேலும் பார்க்க

ஓய்வு பெறுகிறேனா? வதந்திகளை நம்பாதீர்கள்: பாகிஸ்தான் வீரர் பேட்டி!

34 வயதாகும் பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஸமான் ஓய்வு பெறப்போவதில்லை எனக் கூறியுள்ளார். கடந்த 2017இல் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் அணி தற்போது அரையிறுதிக்கு நுழையாமல் வெளியே செல்கிறது. ஃபகார் ஸமான்... மேலும் பார்க்க

தோல்வி எதிரொலி: கேப்டன் பொறுப்பு, ஒருநாள் போட்டிகளில் விலகும் ஜாஸ் பட்லர்?

சாம்பியன்ஸ் டிராபி தோல்வியால் கேப்டன் பொறுப்பு குறித்து பட்லர் சிந்திப்பதாகக் கூறியுள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ‘த்ரி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - வங்கதேச போட்டி: டாஸ் சுண்டுவதில் தாமதம்! வெல்லும் முனைப்பில் மழை!

பாகிஸ்தான் - வங்கதேச போட்டிக்கான ராவல்பிண்டி மைதானத்தில் மழை பெய்துவருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தானில் நடைபெறும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப்-ஏ பிரில் உள்ள இந்தியா, ... மேலும் பார்க்க

ரஞ்சி இறுதிப் போட்டி: விதர்பா அணி 373 ரன்கள் குவிப்பு!

ரஞ்சி இறுதிப் போட்டி 2ஆம் நாளில் விதர்பா அணி 373 ரன்கள் குவித்துள்ளது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் கேரளத்துக்கு எதிராக விதா்பா, முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்க... மேலும் பார்க்க